மூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்!
சென்னை: பிரபல நடிகையை அந்த இயக்குநர் விவாகரத்து செய்ததற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த இயக்குநர்தான் நடிகையை தனது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்ற நடிகை, அந்த இயக்குநரின் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வந்தார்.

திருமணம்
நாளடைவில் நடிகை - இயக்குநர் என்ற உறவையும் தாண்டி அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. காதலுக்கு இருவரின் குடும்பமும் பச்சைக்கொடி காட்ட வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கசந்தது..
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் நடிகை. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 4 ஆண்டுகளில் திருமண வாழ்க்கை கசந்து ஆளுக்கொரு பக்கமாய் பிரிந்து விட்டார்கள்.

வேறு ஒரு துணை
அதன்பின் இயக்குநர் வேறு ஒரு துணையை தேடிக்கொண்டார். ஆனால் நடிகை அதன் பிறகுதான் தீயாய் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எந்த மொழியையும் விட்டு வைப்பதில்லை.

மூச்சு முட்ட குடி, சண்டை
இந்நிலையில் இயக்குநருக்கும் நடிகைக்கும் மோதல் ஏற்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது எப்போதும் சரக்கும் கையுமாகவே இருந்துள்ளார் நடிகை. அதோடு மூச்சுமுட்ட குடித்துவிட்டு என் கேரியரை காலி செய்துவிட்டு கணவரான இயக்குநரிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

ஒத்து வரமாட்டார்
நடிகை வழிக்கு வந்துவிடுவார் என எதிர்பார்த்ததாம் குடும்பம். ஆனால் நாளுக்கு நாள் மோதல் அதிகரிக்க இந்தப் பெண் நம் குடும்பத்திற்கு ஒத்து வரமாட்டார் என முடிவு செய்த குடும்பம் நடிகையை விவாகரத்து செய்ய வற்புறுத்தியுள்ளது.

போதையில் ரகளை
வாரிசை எதிர்பார்த்த இயக்குநர், குடும்பத்தினர் சொல்வதை கேட்போம் என நடிகையை விவாகரத்து செய்ய முன்வந்தாராம். அதன் பிறகே இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர். பட வாய்ப்பு இல்லாத போதே நடிகை ஹோட்டல் ஒன்றில் குடித்து விட்டு ரகளை செய்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











