படத்துல கமிட்டானதும் ஆளே மாறிட்டாங்களாம் அந்த பிரபலம்.. அவர கழட்டிவிட்டதுக்கு காரணமும் அதுதானாம்!
சென்னை: அக்கட தேசத்தை சேர்ந்த அந்த பிரபலம் படத்தில் கமிட்டான பிறகு ஆளே மாறிட்டாங்களாம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் மூன்றாவது முறையாக மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றது அந்த மேற்கத்திய நிகழ்ச்சி. இதனை தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தான் தொகுத்து வழங்கி வந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு பிரபலங்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். இதில் நமது அண்டை நாட்டை சேர்ந்த பெண் பிரபலம் ஒருவரும் பங்கேற்றார்.

கடுப்பான மக்கள்
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக இருந்த அவர், பின்னர் காதல் கடலை என சக நடிகருடன் வாழ்க்கையை கொண்டாடினார். இதனால் தொடக்கத்தில் அவரை ரசித்த மக்கள் பின்னர் வெறுக்க தொடங்கினர். அதோடு நாட்கள் செல்ல செல்ல ரொம்பவே ஆட்டிட்யூட் காட்ட தொடங்கினார். இதனால் கடுப்பான மக்கள் அவரை திட்டி தீர்த்தனர்.

காதலனே உலகம்
தனது காதலனே உலகம் என்றிருந்த அவர் சக ஹவுஸ்மேட்ஸ்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அப்பா அப்பா என்று பிரபலத்துக்காக இயக்குநர் ஒருவருடன் சுற்றி வந்தார். ஓரளவுக்கு பிரபலம் கிடைத்தவுடன், பின்னர் அவரையே யார் என கேட்கும் ரேஞ்சுக்கு ஆளானார்.

யாரும் தேவையில்லை
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தனக்கு வெளியில் கிடைத்திருக்கும் பிரபலத்தை கண்டு பிரமிப்படைந்த அவர், இனிமேல் கெத்தை மெயின்டெய்ன் பண்ண வேண்டும் என முடிவு செய்து விட்டாராம். தனக்கு எப்படியும் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கும். இந்த நேரத்தில் காதல் கீதல் என பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்திருக்கிறாராம்.

நட்புக்கு கத்தரி
இதன் காரணமாகதான் தான் உருகி உருகி காதலித்த அவரையும் கழட்டி விட்டாராம். அவர் எதிர்பார்த்தப்படியே அந்த நேரத்தில் தான் இரண்டு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தன. இதனால் தலைகணத்தின் உச்சத்தில் இருக்கிறாராம் அந்த பிரபலம். நெருக்கமான நண்பர்கள் பலரையும் கத்தரி போட்டு விட்டாராம்.

அதற்குள் இப்படியா?
அதேபோல் வெளியே சென்றாலும் தான் தான் அடுத்த நயன்தாரா என்பதை போல நடந்து கொள்கிறாராம் அந்த பிரபலம். உடை விஷயத்திலும் அந்த பிரபலத்திடம் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம். இன்னும் நடிக்கவே ஆரம்பிக்க வில்லை அதற்குள் இப்படியா என கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

இப்பவே இப்படி
அந்த நிகழ்ச்சியிலேயே வந்த புதிதில் அவர் நடந்து கொண்டதற்கும் பிறகு மக்களின் சப்போர்ட்டை பார்த்த பிறகு அவர் நடந்து கொண்டதற்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. இதையேதான் தனது நிஜ வாழ்க்கையிலும் நட்பு மற்றும் சொந்த பந்தங்களுக்கு இடையே செய்திருக்கிறார். இப்பவே இப்படி என்றால் படத்தில் நடித்த பிறகு எப்படி இருக்குமோ என கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.


Click it and Unblock the Notifications











