கிளாமரை நம்பி கேரியரை காலியாக்கி கொண்ட நான்கெழுத்து நடிகை.. நட்பு வட்டத்தில் ஒரே புலம்பலாம்!
சென்னை: குடும்பப்பாங்கான கேரக்டரில் நடித்து வந்த அந்த நான்கெழுத்து நடிகை கிளாமர் காட்டியதால் கேரியரே காலியாகிவிட்டதாக புலம்பி வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் தரமான இயக்குநரின் படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தவர் அந்த நான்கெழுத்து நடிகை.
ஆரம்பத்தில் ஏழை வீட்டு பெண், மிடில் கிளாஸ் குடும்பம் என தனது முகவெட்டுக்கு ஏற்ப கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார்.

மேக்கப் இல்லாமலே செம அழகு
இதனால் எடுத்த எடுப்பிலேயே நடிகைக்கு ரசிகர்கள் பட்டாளம் எகிறியது. இப்படி ஒரு குடும்ப குத்து விளக்கு நடிகைதான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என சொல்லாத ரசிகர்கள் இல்லை. மேக்கப் இல்லாமலே செம க்யூட்டாக இருப்பார் அந்த நான்கு எழுத்து நடிகை.

மினிமம் கேரண்டி நடிகர்
இதனாலேயே தமிழ் சினிமாவை சேர்ந்த மினிமம் கேரண்டி நடிகர் ஒருவர் நடிகையின் பின்னால் ஆட்டுக்குட்டியை போல் சுற்றி சுற்றி வந்தார். நடிகையும் அவரை காதலித்ததாக தகவல் பரவியது. ஆனால் நடிகருக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்ததால் அக்கட தேசத்தில் தஞ்சமானார் நடிகை.

நடிகையை கழட்டிவிட்ட தயாரிப்பாளர்
அங்கு தயாரிப்பாளர் ஒருவர் நடிகையை வளைத்து போட்டார். திருமணம் செய்து கொள்ளாமலேயே நடிகருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார் நடிகை. ஆனால் என்ன நினைத்தாரோ தயாரிப்பாளர், நடிகையை கழட்டிவிட்டு விட்டார். இதனால் முழு மூச்சாக நடிப்பில் இறங்கினார் நடிகை.

ஐட்டம் பாடலுக்கு ஆட்டம்
இழுத்து போர்த்திக் கொண்டு நடித்தால் வேலைக்கு ஆகாது என யாரோ சொல்ல, ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தால் கூட பரவாயில்லை என ஒப்புக்கொண்டார் நடிகை. சில படங்களில் ஒவர் கிளாமர் காட்டி ஐட்டம் பாடலுக்கு ஆடி வந்தார் நடிகை.

கிளாமரை நம்பி கேரியரே காலி
கிளாமர் காட்டினால் கூடுதல் வாய்ப்பு வரும் என நினைத்த நடிகைக்கு மொத்தமும் ஏமாற்றம் தான். இருந்த வாய்ப்புகளும் போக, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்புதான் வருகிறதாம். இதனால் வெக்ஸ் ஆகியுள்ள நடிகை ஒரு கிளாமரை நம்பி கேரியரை காலி செய்து கொண்டேனே என நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











