Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இவ்ளோ பேராசை கூடாது.. ஒத்தை விரலை காட்டும் வாரிசு நடிகர்.. ஓட்டம்பிடிக்கும் தயாரிப்பாளர்கள்!
சென்னை: பிரபல வாரிசு நடிகர் திடீரென சம்பளத்தை உயர்த்தியிருப்பது பல தயாரிப்பாளர்களை தலை சுற்ற வைத்துள்ளதாம்.
1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் அந்த நடிகர். வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமா சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்க உச்சம் தொட்டார்.
தொடர்ந்து முன்னிலை.. உங்க அப்பா ஆசி இருக்கு.. விஜய் வசந்துக்கு வாழ்த்து சொன்ன வெங்கட் பிரபு!
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரது மூத்தமகன் சினிமாவுக்குள் நுழைந்தார்.
இரண்டு எழுத்து இயக்குநர்
சாக்லேட் பாயாக சினிமா கேரியரை தொடங்கிய அந்த வாரிசு நடிகர் இரண்டு எழுத்து இயக்குநரின் படத்தின் மூலம் பட்டைத் தீட்டப்பட்டார். இதனால் என்ன மாதிரியான கதாப்பாத்திரம் என்றாலும் சிறப்பாக செய்யும் அளவுக்கு வளர்ந்தார் அந்த வாரிசு.
ஒரு கோடியாக உயர்த்தி
மினிமம் கியாரண்டி என்று கூறப்பட்ட நடிகர் லட்சங்களில்தான் சம்பளம் பெற்று வந்தார். ஆனால் திடீரென தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம் தயாரிப்பாளர்கள்.
நடிகரின் பேராசை
வாரிசு நடிகர் இப்படி ஒத்தை விரலை காட்டுவதை பார்த்த தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகிறார்களாம். நடிகரின் பேராசையால் தனக்காக வாய்ப்பை சின்னத்திரை நடிகர் ஒருவரிடம் பறிகொடுத்தார்.
ரொம்பவே கறார்
இதேபோல் நடிகரின் சம்பள உயர்வு விவகாரத்தால் பல படங்களின் வாய்ப்புகள் பறிபோய் வருகிறதாம். சம்பளத்தை உயர்த்தியிருப்பதோடு ரொம்பவே கறாராகவும் இருக்கிறாராம் வாரிசு.
அப்பா போல் இல்லை
நடிக்கும் படங்களிலும் தயாரிப்பாளர்களின் பாரத்தை ஏற்றிவிட்டு விடுகிறாராம் நடிகர். இதனால் படங்களில் நடிகரை ஒப்பந்தம் செய்யவே அஞ்சுகிறார்களாம் தயாரிப்பளார்கள். நடிகருக்கு நெருக்கமானவர்களிடம் அப்பா போல் இல்லை மகன் என்றும் புலம்பி வருகிறார்களாம்.