கதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே!

சென்னை: காதலித்த நடிகர் கல்யாணமாகி செட்டிலாக, உச்ச நடிகை இரவு பகலாக சரக்கே துணை இருந்து வருகிறாராம்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் ஒரு கை பார்த்து வரும் நடிகை அவர்.

பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என ஆசைப்பட்ட அந்த நடிகை வட இந்தியாவுக்கும் ட்ரிப் அடித்தார்.

காதல் அனுபவம்

காதல் அனுபவம்

ஆனால் பாவம்.. அங்கு அவரால் சோபிக்க முடியவில்லை. போன வேகத்தில் திரும்பி வந்த நடிகை உச்ச நடிகர்கள் பலருடனும் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகைக்கு காதல் அனுபவமும் உண்டு. அக்கட தேசத்து ஆறடி உயர நடிகரை காதலித்து வந்தார் நடிகை.

உயிருக்கு உயிராய்

உயிருக்கு உயிராய்

இரவு பார்ட்டிகளில் ஜோடியாக பங்கேற்பது, டேட்டிங் செல்வது, நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி அவர்களின் உயிருக்கு உயிரான காதலை உறுதிப்படுத்தியது. இருவரும் நீயில்லாமல் நானில்லை, நானில்லாமல் நீயில்லை என உருகினர்.

மாறி மாறி வாழ்த்து

மாறி மாறி வாழ்த்து

ஆனால் இவர்களின் காதலில் திடீரென புயல் வீசியது. நடிகரை பிரிந்துவிட்டதாக அறிவித்தார் காதலி. இருவருக்கும் இடையிலான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருந்த போதும் பிறந்த நாள் என்றால் சேர்ந்து கொள்வார்கள். மாறி மாறி வாழ்த்து சொல்லிக் கொள்வார்கள்.

அதிபருக்கு சிக்னல்

அதிபருக்கு சிக்னல்

இதனால் இருவருக்கும் இடையிலான காதல் இன்னமும் உயிர்ப்புடன்தான் உள்ளதா என பலரும் சந்தேகித்தனர். ஆனால் இல்லலே இல்லை என்பதை போல, தன்னை நேசித்த தொழில் அதிபர் ஒருவருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தார் நடிகை.

எண்டு கார்டு

எண்டு கார்டு

அந்த சிக்னல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. திருமணத்திற்கு முன்பாகவே கோடிகளில் வருங்கால மனைவியான நடிகைக்கு பரிசளித்தார் அந்த தொழில் அதிபர். ஆனால் நிச்சயதார்த்தத்துடன் அதற்கும் எண்டு கார்டு போட்டார் நடிகை.

வெகு விமர்சையாக

வெகு விமர்சையாக

நடிகையின் அந்த முடிவுக்கு முன்னாள் காதலர்தான் காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் அந்த வளர்ந்த நடிகர், மீண்டும் காதலில் விழுந்து இளம் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். லாக்டவுன் நேரத்தில் விமர்சையாக நடந்தது.

சரக்கே துணை

சரக்கே துணை

ஆனால் அந்த திருமணத்திற்கு பிறகு டாப் நடிகை ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். போச்சே போச்சே எல்லாம் போச்சே என புலம்பி வரும் அந்த நடிகை, புண்பட்ட மனதை சரக்கடித்து ஆற்றி வருகிறாராம்.
தற்போது ஷுட்டிங் எதுவும் இல்லாமல் இருப்பதால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் நடிகை இரவு பகல் என எந்நேரமும் சரக்கே துணை என இருந்து வருகிறாராம்.

புலம்பும் நடிகை

புலம்பும் நடிகை

நடிகைக்கு நெருக்கமானவர்கள், சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது இதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் என கடந்து போ என அட்வைஸ் செய்து வருகிறார்களாம். ஆனால் எதற்கும் ஆறுதலாகவில்லையாம் நடிகை. தன் மீதுதான் தவறு என்பது போல புலம்பி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X