Just In
- 1 min ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
- 10 min ago
சேலையில் பின்னழகை காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை!
- 26 min ago
2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்!
- 29 min ago
ஸ்டைலா கெத்தா மாஸா கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட டிராவலிங் டைரிஸ் புகைப்படங்கள்!
Don't Miss!
- Automobiles
உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு... கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியது டாடா!
- News
பழனி, திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா... பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் - அரோகரா முழக்கம்
- Sports
ஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன?.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இவ்வளவு ரணகளத்துக்குப் பிறகும் ஏன் இப்படி... அந்த உசர ஹீரோவுக்கு தூது விடறாராமே கண்ணாடி இயக்கம்!
சென்னை: ஆக்ஷன் ஹீரோ படத்தில் இருந்து வெளியேறிய இயக்கம், ஹீரோவுக்கு தூது விட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
கண்ணாடி இயக்குனர், உசர ஹீரோவை வைத்து டிடெக்டிவ் என்ற படத்தை இயக்கினார். அதற்கு வரவேற்பு கிடைத்தது.
அடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவருகிறார். அதில் நடித்த நடிகர்களே இதிலும் பெரும்பாலும் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது.
'இந்தியன் 2' விபத்து எதிரொலி... உஷாரான சிம்புவின் மாநாடு பட குழு.. என்ன பண்ணியிருக்காங்க பாருங்க!

முட்டல் மோதல்
லண்டன் ஷூட்டிங், சரியான திட்டமிடல் இல்லாததால், சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லையாம். இதனால் ஏகப்பட்ட செலவாக, தயாரிப்பாளரான அந்த ஹீரோவுக்கும் கண்ணாடி இயக்குனருக்கும் முட்டல் மோதல். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் வெடித்துவிடும் நிலையிலேயே இருவருக்குமான மோதல் இருந்ததாம்.

நேருக்கு நேராக
ஒரு நாள் பார்ட்டியில் மெதுவாக ஆரம்பித்த இந்த கோபம், வாக்குவாதமாகி, மோதலுக்குச் சென்றதாம். படப்பிடிப்பில் இருவரும் நேருக்கு நேராக மோதலில் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள். பிறகு ஷூட்டிங்கில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். சில நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்துள்ளது.

அதிக சம்பளம்
கடந்த டிசம்பர் மாதம் படக்குழு சென்னை திரும்பியது. இதற்கிடையே இயக்குனர் இயக்கிய சைக்கோத்தனமான படம் ஓடிவிட, தனது சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்டாராம் இயக்குனர். ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறதோ அதைதான் தருவோம் என்றார் ஹீரோ. பிறகு சில நாட்கள் கழித்து, எனக்கு இந்தப் படத்தை இயக்க விருப்பமில்லை என்றாராம்.

நொந்து போன ஹீரோ
பாதி முடிந்த நிலையில் அந்த இயக்குனர் இப்படி சொன்னதில் நொந்து போய்விட்டாராம் தயாரிப்பாளருமான ஹீரோ. பிறகுதான், சரி என்று சொல்லி விட்டாராம் ஹீரோ. இந்நிலையில், கண்ணாடி இயக்குனரின் தம்பி, 'அண்ணன் டென்சன்ல அப்படி சொல்லி ருப்பாரு... அவரை சமாதானப்படுத்தி ஹீரோ வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்' என்று சொல்லி இருக்கிறாராம். இருவரும் சமாதானம் ஆவார்களா என்பது தெரியாது.