Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இவ்வளவு ரணகளத்துக்குப் பிறகும் ஏன் இப்படி... அந்த உசர ஹீரோவுக்கு தூது விடறாராமே கண்ணாடி இயக்கம்!
சென்னை: ஆக்ஷன் ஹீரோ படத்தில் இருந்து வெளியேறிய இயக்கம், ஹீரோவுக்கு தூது விட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
கண்ணாடி இயக்குனர், உசர ஹீரோவை வைத்து டிடெக்டிவ் என்ற படத்தை இயக்கினார். அதற்கு வரவேற்பு கிடைத்தது.
அடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவருகிறார். அதில் நடித்த நடிகர்களே இதிலும் பெரும்பாலும் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது.
'இந்தியன் 2' விபத்து எதிரொலி... உஷாரான சிம்புவின் மாநாடு பட குழு.. என்ன பண்ணியிருக்காங்க பாருங்க!
முட்டல் மோதல்
லண்டன் ஷூட்டிங், சரியான திட்டமிடல் இல்லாததால், சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லையாம். இதனால் ஏகப்பட்ட செலவாக, தயாரிப்பாளரான அந்த ஹீரோவுக்கும் கண்ணாடி இயக்குனருக்கும் முட்டல் மோதல். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் வெடித்துவிடும் நிலையிலேயே இருவருக்குமான மோதல் இருந்ததாம்.
நேருக்கு நேராக
ஒரு நாள் பார்ட்டியில் மெதுவாக ஆரம்பித்த இந்த கோபம், வாக்குவாதமாகி, மோதலுக்குச் சென்றதாம். படப்பிடிப்பில் இருவரும் நேருக்கு நேராக மோதலில் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள். பிறகு ஷூட்டிங்கில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். சில நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்துள்ளது.
அதிக சம்பளம்
கடந்த டிசம்பர் மாதம் படக்குழு சென்னை திரும்பியது. இதற்கிடையே இயக்குனர் இயக்கிய சைக்கோத்தனமான படம் ஓடிவிட, தனது சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்டாராம் இயக்குனர். ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறதோ அதைதான் தருவோம் என்றார் ஹீரோ. பிறகு சில நாட்கள் கழித்து, எனக்கு இந்தப் படத்தை இயக்க விருப்பமில்லை என்றாராம்.
நொந்து போன ஹீரோ
பாதி முடிந்த நிலையில் அந்த இயக்குனர் இப்படி சொன்னதில் நொந்து போய்விட்டாராம் தயாரிப்பாளருமான ஹீரோ. பிறகுதான், சரி என்று சொல்லி விட்டாராம் ஹீரோ. இந்நிலையில், கண்ணாடி இயக்குனரின் தம்பி, 'அண்ணன் டென்சன்ல அப்படி சொல்லி ருப்பாரு... அவரை சமாதானப்படுத்தி ஹீரோ வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்' என்று சொல்லி இருக்கிறாராம். இருவரும் சமாதானம் ஆவார்களா என்பது தெரியாது.