Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இவ்வளவு ரணகளத்துக்குப் பிறகும் ஏன் இப்படி... அந்த உசர ஹீரோவுக்கு தூது விடறாராமே கண்ணாடி இயக்கம்!
சென்னை: ஆக்ஷன் ஹீரோ படத்தில் இருந்து வெளியேறிய இயக்கம், ஹீரோவுக்கு தூது விட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
கண்ணாடி இயக்குனர், உசர ஹீரோவை வைத்து டிடெக்டிவ் என்ற படத்தை இயக்கினார். அதற்கு வரவேற்பு கிடைத்தது.
அடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவருகிறார். அதில் நடித்த நடிகர்களே இதிலும் பெரும்பாலும் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது.
'இந்தியன் 2' விபத்து எதிரொலி... உஷாரான சிம்புவின் மாநாடு பட குழு.. என்ன பண்ணியிருக்காங்க பாருங்க!
முட்டல் மோதல்
லண்டன் ஷூட்டிங், சரியான திட்டமிடல் இல்லாததால், சில நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லையாம். இதனால் ஏகப்பட்ட செலவாக, தயாரிப்பாளரான அந்த ஹீரோவுக்கும் கண்ணாடி இயக்குனருக்கும் முட்டல் மோதல். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் வெடித்துவிடும் நிலையிலேயே இருவருக்குமான மோதல் இருந்ததாம்.
நேருக்கு நேராக
ஒரு நாள் பார்ட்டியில் மெதுவாக ஆரம்பித்த இந்த கோபம், வாக்குவாதமாகி, மோதலுக்குச் சென்றதாம். படப்பிடிப்பில் இருவரும் நேருக்கு நேராக மோதலில் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள். பிறகு ஷூட்டிங்கில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். சில நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்துள்ளது.
அதிக சம்பளம்
கடந்த டிசம்பர் மாதம் படக்குழு சென்னை திரும்பியது. இதற்கிடையே இயக்குனர் இயக்கிய சைக்கோத்தனமான படம் ஓடிவிட, தனது சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்டாராம் இயக்குனர். ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறதோ அதைதான் தருவோம் என்றார் ஹீரோ. பிறகு சில நாட்கள் கழித்து, எனக்கு இந்தப் படத்தை இயக்க விருப்பமில்லை என்றாராம்.
நொந்து போன ஹீரோ
பாதி முடிந்த நிலையில் அந்த இயக்குனர் இப்படி சொன்னதில் நொந்து போய்விட்டாராம் தயாரிப்பாளருமான ஹீரோ. பிறகுதான், சரி என்று சொல்லி விட்டாராம் ஹீரோ. இந்நிலையில், கண்ணாடி இயக்குனரின் தம்பி, 'அண்ணன் டென்சன்ல அப்படி சொல்லி ருப்பாரு... அவரை சமாதானப்படுத்தி ஹீரோ வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்' என்று சொல்லி இருக்கிறாராம். இருவரும் சமாதானம் ஆவார்களா என்பது தெரியாது.