Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அதெல்லாம் சரிதான், இதுக்கு என்ன பண்ணுவாங்க? புரமோஷனுக்கு வராத ஹீரோயின் இப்படி கேட்கிறாராமே?
சென்னை: 'எச்சரிக்கை இருக்கட்டும், எனக்கு பேலன்ஸ் இருக்கு, அதை வாங்கி தருவாங்களா?' என்று கேட்டிருக்கிறாராம் மூணுஷா நடிகை
நடிகை மூணுஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார் அந்த பாம்பு, ஏணி படத்தில். இரண்டு வருடத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிந்திருக்கிறது.
ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷனுக்கு மூணுஷாவை அழைத்து இருக்கிறார்கள் தயாரிப்புத் தரப்பில்.
தட்டிக் கழித்தாராம்
பொலிட்டிக்கல் த்ரில்லர் படமான இதில் பெரிய ஹீரோக்கள் யாருமில்லை. சின்ன நடிகர்கள்தான் நடித்துள்ளனர். நடிகஇ மூணு ஷா, படத்தை விளம்பரப்படுத்தினால்தான் படம் மக்களிடம் ரீச் ஆகும் என்று நினைத்திருந்தார், தயாரிப்பு. அதனால் மூணுஷாவிடம் கூறி இருக்கிறார்கள். நடிகை பிசி பிசி என்று தட்டிக் கழித்திருக்கிறார்.
வெளிநாட்டுக்கு
அவர் இப்போது மலையாளத்திலும் ரத்ன இயக்குனர் படத்திலுமே நடித்து வருகிறார். வேறு படங்கள் இல்லை. என்றாலும் நடிகை வரமுடியாது என்பது வேறு வேறு வடிவங்களில் சொன்னாராம். இந்த நிலையில்தான் பாடல் வெளியீடு நடந்திருக்கிறது. நடிகை முந்தைய நாளே, அரபு நாடு ஒன்றுக்குச் சென்றுவிட்டாராம், அங்குள்ள விழா ஒன்றில் கலந்துகொள்ள.
இதையடுத்துதான்
'முந்தைய படங்களில், நடிகையுடன் பெரிய ஹீரோக்கள் நடித்ததால், அவர்களுடன் புரமோஷனில் கலந்துகொண்டார். இதில் அப்படி இல்லை என்பதால்தான் தவிர்க்கிறார் என்று நினைத்தாராம் தயாரிப்பு. இதுபற்றி தனது நெருங்கிய தயாரிப்பாளர்களிடம் வருத்தத்தோடு சொல்ல, இதையடுத்துதான் அந்த எச்சரிக்கையாம். ஆனால், நடிகை கலங்கவில்லை.
நான்கு லட்சம் பாக்கி
படத்துக்கு சம்பளமாக ரூ.75 லட்சம் பேசப்பட்டதாம். அதில் கொஞ்சம் கொஞ்சமாக இதுவரை, 74 லட்சத்தை வாங்கிவிட்டாராம் நடிகை. பாக்கி நான்கு லட்சம் ரூபாயை புரமோஷனில் கலந்து கொண்ட பின் தருகிறேன் என்று சொல்லி இருந்தாராம் தயாரிப்பு. இதனால், எச்சரிக்கை விடுக்கறதெல்லாம் இருக்கட்டும். அந்த பேலன்ஸி வாங்கி தருவாங்களா? என்று கேட்கிறாராம், நடிகையின் அம்மா.