Don't Miss!
- News ஜாபர் சாதிக் செல்போனில் முக்கியமான கான்டாக்ட்ஸ்? நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
அம்மா சொன்ன அந்த வார்த்தை.. உருகி உருகி காதலித்தவரை பிக்பாஸ் நடிகை கழட்டிவிட்டதற்கு காரணம் அதானாம்!
சென்னை: உருகி உருகி காதலித்தவரை பிக்பாஸ் நடிகை கழட்டிவிட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி சேனல்களில் பிரபலமானாவர் அந்த இளம் நடிகை. இளம் வயதிலேயே பல சீரியல்களில் பர்ஃபாமன்ஸ் கொடுத்து பெரும் பிரபலமானார்.
சீரியலில் நடிக்கும் போதே திருமணமான சக நடிகருடன் காதல் கொண்டார் அந்த நடிகை. ஆனால் நடிகையின் காதலை அந்த நடிகர் ஏற்கவில்லை.
'விக்ரம்' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிக்பாஸ் நடிகை... கேரவனில் பெயர் இருக்கும் போட்டோ வைரல்!
பெரிய முதலாளி நிகழ்ச்சி
இதனால் அந்த சீரியலில் இருந்தே ஓட்டம் பிடித்தார் நடிகை. இருப்பினும் நடிகை குறித்தும் அந்த நடிகர் குறித்தும் கிசுகிசுக்கள் ஓயவில்லை. இந்த நேரத்தில் தான் நடிகைக்கு பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
பாடி பில்டருடன் நெருக்கம்
அங்கு போன நடிகை அங்கேயும் சும்மா இருக்காமல் பாடி பில்டர் நடிகரை உருகி உருகி காதலித்தார். இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி உருவானது. நடிகையை விட்டுக்கொடுக்காமல் பாடி பில்டர் நடிகரும் நடிகையை விட்டுக்கொடுக்காமல் இந்த சிவமான நடிகையும் விளையாடி வந்தனர்.
பெரிய வீட்டுக்குள் பிரளயம்
இதனால் பெரிய வீட்டுக்குள்ளேயே பெரும் பிரளயம் வெடித்தது. சமூக வலைதளங்களளிலும் கன்னாபின்னா கமெண்டுகள் பறந்தன. ஆட்டம் பாட்டம் என பெரிய வீட்டுக்குள் லவ் பர்ட்ஸாய் பறந்து திரிந்தது அந்த ஜோடி.
முதுகுக்கு பின்னால் கிண்டல்
பெரிய வீட்டுக்குள் முகத்திற்கு முன்பு பலர் அந்த ஜோடியிடம் இனிக்க இனிக்க பேசினாலும் முதுக்கு பின்னால்
ஆபாசமாய் கிண்டலடித்தனர். ஆனால் அதை புரிந்து கொள்ளாத அந்த ஜோடி அவர்களையே நம்பியது.
வழிய தொடங்கிய நடிகை
ஒரு கட்டத்தில் உள்ளே வந்த நடிகையின் அம்மா, மகளை டார் டாராய் கிழித்து தொங்க விட்டார். இதனால் ஓடிபோய் ஓரமாய் பதுங்கினார் பாடி பில்டர். அம்மா கழுவி ஊற்றிய பிறகு ஓரிரு நாட்கள் மட்டுமே அடங்கிய நடிகை பின்னர் வழக்கம் போல் நடிகரிடம் வழிய தொடங்கி விட்டார்.
நடிகரின் பல லீலைகள்
இதனால் மீண்டும் சமூக வலைதளங்களில் வறுபட்டார் நடிகை. அந்த நேரத்தில் நடிகரின் பல லீலைகளும், பெரிய வீட்டுக்குள் பேசிய பல விஷயங்கள் பொய் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. இருப்பினும் நடிகருக்கான ஆதரவு குறையவில்லை.
பல்பு கொடுத்த நடிகை
நிகழ்ச்சி முடிந்த பிறகும் நடிகையுடன் நெருக்கமாகவே இருந்து வந்தார் அந்த நடிகர். நடிகையின் அம்மாவும் கோபமின்றி பழகினார். இந்நிலையில் சமீபத்தில் அந்த நடிகை, அந்த நடிகரை அண்ணா என கூறி பல்பு கொடுத்துவிட்டார்.
ஓரம் கட்ட வேண்டும்
இதற்கு காரணம் அவரது அம்மா சொன்ன ஒத்தை வார்த்தைதானாம். தற்போது நடிகைக்கு உச்ச நடிகரின் படத்தில் சூப்பர் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் காதலை எல்லாம் ஓரம் கட்ட வேண்டும் என்று கூறினாராம் அம்மா.
சிங்கிளாக இருந்தால் ஷைன் ஆகலாம்
இந்த வயதிலேயே காதல் என சிறிய வட்டத்துக்குள் சிக்கினால் கேரியரே காலியாகிவிடும். காதலை உதறி தள்ளிவிட்டு சிங்கிளாக இருந்தால் சினிமாவில் ஷைன் ஆகலாம் என்று அறிவுரை கூறினாராம் அம்மா. இதனைக் கேட்ட நடிகை, சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தாராம்.
அந்தர்பல்டி அடித்த நடிகை
எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிடைத்ததும் தனது காதலை ஒரு நொடியில் தூக்கி எறிந்து விட்டு அண்ணா அந்தர் பல்டி அடித்து விட்டாராம். தற்போது உச்ச நடிகரின் படத்தில் படு பிஸியாக உள்ளார் அந்த டிவி நடிகை. இதனையறிந்த கோடம்பாக்கத்தினர் அம்மா விவரம்தான் போங்க என முனுமுனுக்கிறார்களாம்.