மூன்று முறை கருக்கலைப்பு.. இரண்டு நடிகர்கள் செய்த துரோகம்.. நடிகையின் முடிவுக்கு இதுவா காரணம்?
சென்னை: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர் அவர். அவரது நடிப்பு, கிளாமர் என அத்தனைக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமின்றி பக்கத்து மாநிலத்தவர்களும் ரசிகர்களாக இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலைமையில்தான் திடீரென அவர் சினிமாவிலிருந்து ஒதுங்க ஆரம்பித்து பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் திருமணம் மட்டும் செய்துகொள்ள மறுத்துவருகிறார்.
கோலிவுட்டில் சீனியர் இயக்குநரின் ஒருவருடைய இயக்கத்தில் நடித்து இங்கு அறிமுகமானவர் அந்த நடிகை. முதல் படத்திலேயே இடம்பெற்ற பாடல்களில் கவர்ச்சியை அள்ளி வீசினார். இதன் காரணமாக அம்மணிக்கென்று தனி கவனத்தை ரசிகர்களும், திரைத்துறையினரும் கொடுத்தார். எனவே அவரும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு தொடர்ச்சியாக நடித்துக்கொண்டே இருந்தார்.
குறைந்த வாய்ப்பு: ஒருகட்டத்தில் கோலிவுட், டோலிவுட் ஆகிய இரண்டு மொழிகளிலும் டாப் 3 இடங்களுக்குள் தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டிருந்தார். கண்டிப்பாக இன்னும் பத்து வருடங்களுக்கு நடிகையின் சாம்ராஜ்ஜியத்தை அசைக்க முடியாது என்றே பலரும் ஆரூடம் கூறினார்கள். அதற்கேற்றபடிதான் அம்மணியின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் சரசரவென்று உயர்ந்துகொண்டே சென்றது. ஆனால் திடீரென அவருக்கு கொட்டிக்கொண்டிருந்த வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

என்ன காரணம்?: அதற்கு கோலிவுட் மற்றும் டோலிவுட்டை சேர்ந்த நடிகர்கள் இரண்டு பேர் என சொல்லப்பட்டது. அதாவது இங்கு நடித்தபோது பல யுவதிகளின் கனவு நாயகனாக வலம் வரும் ஒரு ஹீரோவுடன் நடிகைக்கு ஏற்பட்ட பழக்கம் கட்டில்வரை சென்றுவிட்டதாம். எப்படியும் இவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று நம்பியிருந்த அம்மணிக்கு; நடிகரோ பழக்கமெல்லாம் கட்டிலோடு சரி; மணமேடை வரையெல்லாம் கொண்டு செல்லக்கூடாது என்று சொல்லி பிரிந்துவிட்டாராம்.
இன்னொரு நடிகரும்?: சரி என்று மனதை தேற்றிக்கொண்டு தொடர்ந்து நடித்தவர் இன்னொரு நடிகருடன் காதலில் விழுந்தாராம். இவர்கள் இரண்டு பேரும் ஒரே வீட்டில் லிவிங்கில் இருந்திருக்கிறார்கள். அப்போது ஏகப்பட்ட முறை நடிகையை ஆசை தீர அனுபவித்தாராம் நடிகர். ஒருகட்டத்தில் திருமணம் பற்றிய பேச்சு எழ; முதல் நடிகர் சொன்னதையே இரண்டாவது நடிகரும் வழிமொழிந்தாராம். இதனால் ரொம்பவே அப்செட்டாகி கவனம் சிதறியதால்தான் சினிமாவிலிருந்து நடிகை ஒதுங்கக்கூடிய சூழல் உருவானதாம்.
நோ திருமணம்: ஒருவழியாக இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அது அவரது வீட்டினருக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது சோகத்தை கொடுத்திருக்கிறதாம். ஆனால் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்பதில் உறுதியோடு இருக்கிறாராம் நடிகை.
ஏனெனில் ஏற்கனவே தன்னை யூஸ் செய்துகொண்ட நடிகர்கள் மூலம் மூன்று முறை கர்ப்பமாகி; நடிகர்களின் வற்புறுத்தலின்போரில் அந்த கருவை கலைக்கவும் செய்தாராம். அதிலிருந்தே மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் சோர்வடைந்த நடிகை; திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என திட்டவட்டமாக குடும்பத்தாரிடம் கூறிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











