உன் மனைவி எனக்கு வேண்டும்.. நடிகையின் கணவரிடம் எல்லை மீறிய நடிகர்.. சண்டைக்கு சென்ற கணவர்?
சென்னை: சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவர் அந்த நடிகை. பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர் இயக்கிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்; தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்தார். குறிப்பாக மாஸ் நடிகர்களில் ஒருவருடன் நெருக்கம் காண்பித்ததாகவும் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இப்போது புதிய முணுமுணுப்புகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
தாயை போல பிள்ளை என்பதற்கேற்ப இவரும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். குறிப்பிடத்தக்க இயக்குநர் ஒருவரது இயக்கத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அம்மணி; குறுகிய காலத்திலேயே வளர்ந்த நடிகையாக மாறிவிட்டார். வெறும் மரத்தையும், ஹீரோவையும் சுற்றி வந்து டூயட் பாடும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல் தனது திறமைக்கு தீனி போடும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்தார். இதனால் புகழும், பணமும், விருதுகளும் தேடி வந்தன.
டாப் ஹீரோக்களுடன்: கமர்ஷியல் பாதையிலிருந்தும் பார்வையை விலக்காத அந்த வெளிச்ச நடிகை டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார். உச்ச நட்சத்திரங்களோடு ஜோடி போட்டாலும் அளவுக்கதிகமான கிளாமர் எதையும் காண்பிக்கவில்லை. ஒருகட்டத்தில் பாலிவுட்டுக்கு சென்ற அவர்; முதல் படத்திலேயே தாராளமாக தனது அழகுகளை வெளிச்சம் போட்டு காண்பித்தார். அவர் அப்படி கிளாமர் காண்பித்ததை பார்த்து தென்னிந்திய ரசிகர்கள் அடடே என சொல்லி ஆச்சரியக்குறி போட்டார்கள்.

நடிகருடன் நெருக்கம்:: இதற்கிடையே மாஸ் நடிகர்களில் ஒருவருடன் இரண்டு படங்கள் சேர்ந்து நடித்தார். அப்போது அவர்க்ள் இரண்டு பேருக்கும் பற்றிக்கொண்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி நடிகையை நினைத்தபோதெல்லாம் பார்க்க வேண்டுமென்பதற்காக; அவரை எங்கேயும் விடாமல் தனது வீட்டுக்கு அருகிலேயே தங்க வைத்துக்கொண்டார் என்ற பேச்சுக்கள் எல்லாம் பலமாகவே ஓடிக்கொண்டிருந்தன.
திருமணம்: ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக நடிகை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணம் செய்ததற்கே இன்னொரு காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதாவது நடிகருடன் இப்படியே இருந்துகொண்டிருந்தால் கரியரும் போய்விடும், பெர்சனல் லைஃபும் போய்விடும் என நினைத்து; தனது காதலருடன் உடனடியாக திருமணம் செய்துகொண்டார். இது ஒருபக்கம் இருக்க நடிகருடன் நடிகைக்கு இருந்த நெருக்கம் உண்மையில்லை என அந்தக் காதலர் நம்பிக்கொண்டுதான் இருந்தாராம்.
சண்டைக்கு சென்ற கணவர்: அந்த நம்பிக்கையெல்லாம் திருமணமான சில காலத்திலேயே உடைந்து போய்விட்டது என கூறப்படுகிறது. நடிகருடனான நெருக்கத்தை நடிகை திருமணமான புதிதில் குறைத்துக்கொள்ளவே இல்லையாம். ஆனால் கணவர் நடிகையிடம் பக்குவமாக பேசி புரியவைத்ததால் நடிகருடனான கான்டாக்ட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் நடிகரோ தொடர்ந்து நடிகையை தொடர்புகொண்டு சந்திக்க வேண்டும் என நச்சரித்துக்கொண்டே இருந்தாராம். ஒருகட்டத்தில் கணவரையே தொடர்புகொண்டு, உங்கள் மனைவியை சந்திக்க பெர்மிஷன் கொடுங்கள் என்று கேட்டுவிட்டாராம்.
இதனால் பொறுத்துக்கொள்ள முடியாத நடிகையின் கணவர்; நடிகரின் நண்பர்களிடம் முதலில் பஞ்சாயத்துக்கு சென்றிருக்கிறார். அவர்களோ பேசுகிறோம் என்று சொல்லி தட்டி கழித்தார்களாம். அதனையடுத்து பொங்கியெழுந்த கணவர், 'இனி என் மனைவியை தொடர்புகொண்டால் பத்திரிகைகளை அழைத்து உண்மையை சொல்லிவிடுவேன்' என சொல்ல; நடிகர் கடந்த கொஞ்ச காலமாக சைலெண்ட்டாக இருந்துவருகிறாராம்.


Click it and Unblock the Notifications











