மறுமணம் செய்ய சொல்லி வீட்டில் டார்ச்சர்.. நடிகர்களின் பெர்மிஷனுக்காக காத்திருக்கும் தொகுப்பாளினி?
சென்னை: தமிழ்நாட்டில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் அவர். பிரபலங்களை அவர் பேட்டி எடுக்கும்போது கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண உறவு பாதியில் முடிந்தது. இதனையடுத்து அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்லி அவரது வீட்டில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.
தமிழில் சில படங்களில் நடித்த அவர் சினிமா மூலம் பெரிதாக பிரபலமாகவில்லை. ஆனால் சின்னத்திரைக்கு அவர் வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் செம பிரபலமானார். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் என்றாலே போர் அடிக்காமல் செல்லும் என்பது மக்களின் நிலைப்பாடு. அதன் காரணமாக அவர் பணியாற்றிய சேனல் நிர்வாகம் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பினை அம்மணிக்கு கொடுத்தது. அம்மணியும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு சிக்சர் அடித்தார்.

கலகல தொகுப்பாளினி: பொதுவாக ஒரு தொகுப்பாளர்தான் ஒரு நிகழ்ச்சியின் நடத்துநர். அவர் எப்படி அந்த நிகழ்ச்சியை நடத்தி செல்கிறாரோ அதை பொறுத்துதான் அந்த நிகழ்ச்சியோ அல்லது பேட்டியோ மக்களிடம் ஹிட்டடிக்கும். இவர் பிரபலங்களிடம் பேட்டி எடுத்தால் சர்வ சாதாரணமாக கலகலப்பை தூவிதான் எடுத்து செல்வார். யாராக இருந்தாலும் அவர்களுடன் ஜெல் ஆகிவிடுவதால் பிரபலங்களும் பல சமயங்களில் மிக கேஷுவலாக பேட்டியில் பேசுவார்கள். இதனால் அந்தப் பேட்டிகள் மிகப்பெரிய ஹிட்டடிக்கும்.
திருமண வாழ்க்கை: சின்னத்திரை தொகுப்பாளினிகளில் இவர்தான் சூப்பர் ஸ்டார் என்று பெயர் எடுத்த அம்மணிக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மிக பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்களும் ஏராளமானோர் கலந்துகொண்டதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் இந்த தொகுப்பாளினிக்கு இருக்கும் மவுசை. சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பாதியில் முடிந்தது. இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.
என்ன காரணம்?: இந்தத் திருமண முறிவுக்கு காரணமே தொகுப்பாளினிதான் என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது. அதாவது திருமணத்துக்கு பிறகும் நைட் பார்ட்டிகளுக்கு செல்வது; சில நடிகர்களுடன் இருந்த தொடர்பை முறித்துக்கொள்ளாதது உள்ளிட்டவைகளை அவரது கணவர் விரும்பவில்லை. சொல்லி சொல்லி பார்த்த பிறகுதான் அவர் பிரிந்துவிட்டார் என்றெல்லாம் பேசப்பட்டன. ஆனால் இதுகுறித்து தொகுப்பாளினி இதுவரை கப் சிப் என்றுதான் இருக்கிறார்.
பெர்மிஷன் கிடைக்குமா?: இந்தச் சூழலில் இப்போது தொகுப்பாளினி பற்றி புதிய கிசுகிசு ஒன்று பரவியிருக்கிறது. அதாவது இன்னமும் இரண்டு நடிகர்களின் கட்டுப்பாட்டில்தான் அந்த தொகுப்பாளினி இருக்கிறாராம். அவர்களுக்கு விருந்து படைப்பதை முழு நேர வேலையாக செய்துவருகிறாராம். ஆனால் இந்த விஷயங்கள் தெரியாத குடும்பத்தினர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்களாம். தொகுப்பாளினியோ நடிகர்களின் பெர்மிஷன் கிடைத்தால்தான் திருமண வாழ்க்கை சுமூகமாக போகும். இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிறகும் நடிகர்களால் ஏதாவது தொல்லை வந்தால் இதுவும் போய்விடும் என்று அஞ்சுவதால்; திருமணத்துக்கு பிறகு எந்த தொந்தரவும் தரக்கூடாது என்ற உத்தரவாதத்தை கொடுத்தால்தான் இரண்டாவது திருமணம் செய்துகொள்வேன் என்று நடிகர்களிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











