Don't Miss!
- News ஜாபர் சாதிக் செல்போனில் முக்கியமான கான்டாக்ட்ஸ்? நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
அப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு!
பிக்பாஸ் நடிகையால் படக்குழுவினர் பயத்தில் இருக்கிறார்கள்.
சென்னை: பெரிய முதலாளி வீட்டிற்கு போகுமுன்னரே அந்த பப்ளி நடிகை படப்பிடிப்பு தளத்தில் பந்தா காட்டியவராம். இனி, வெளியில் வந்து இன்னும் என்னென்ன பந்தா காட்டுவாரோ என்கின்றனர் அவரை வைத்து படம் இயக்கியவர்கள்.
கஸ்டமர் கேர் தொடர்பான படத்தில் அறிமுகமானவர் அந்த பப்ளி நடிகை. அடுத்து டாஸ்மாக் படம் ஒன்றில் நடித்து வந்தபோது தான், பெரிய முதலாளி வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
உடனே படக்குழுவினரிடம் பேக்-அப் சொல்லி விட்டு பறந்து விட்டார் அந்த வீட்டிற்கு.
பெரிய முதலாளி:
பெரிய முதலாளி வீட்டில் முக்கியமானவராக தற்போது அவர் வளைய வருகிறார். காரணம் அவர் இளமையான, திறமையான நடிகை என்பது மட்டுமல்ல, அனைவருடனும் எளிமையாக பழகும் சுபாவம் கொண்டவர் என்பதும் தான்.
நடிகையின் யுக்தி:
ஆனால், புலி பதுங்குவது பாய்வதற்குத் தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். எப்போதும் ஆரம்பத்தில் இப்படி அடக்கி வாசிப்பது தான் அவரது டெக்னிக்காம். பின்னர் தன் வேலையை காட்டுவார் என்கிறார்கள்.
சிறிய படம்:
இதற்கு உதாரணமாக பெரிய முதலாளி வீட்டிற்கு செல்லும் முன் நடித்து வந்த படத்தில் நடந்த சம்பவத்தைக் கூறுகிறார்கள். கையில் வேறு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வந்த அப்படத்தில், ஆரம்பத்தில் மிகவும் எளிமையாக செலவுகள் எதுவும் வைக்காமல் இருந்துள்ளார்.
கேரவன் கேட்டு அடம்:
ஆனால், படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டவுடன், இனி தன்னை மாற்ற வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, தனி கேரவன் வேண்டும் என அடம் பிடித்தாராம். இதனால் வேறு வழியின்றி அதிக செலவு செய்து படக்குழுவும் அவருக்கு கேரவன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
செலவு அதிகம்:
தயாரிப்பாளர் குண்டா செய்யும் அளவு கொடுத்த பணத்தில், அண்டாவே செய்து அசத்த வேண்டும் என்ற தன் எண்ணத்தில் இதனால் மண் விழுந்து விட்டதாக நொந்து போயுள்ளார் இயக்குநர். இன்னும் நடிகை சம்பந்தப்பட்ட காட்சிகள் சில படமாக்கப்பட வேண்டி இருக்கிறது.
படக்குழு பயம்:
படவாய்ப்புகள் இல்லாமல் காற்றாடிய போதே கேரவன் கேட்டு அடம் பிடித்த நடிகை, இனி பெரிய முதலாளி வீட்டில் இருந்து வந்த பிறகு, இன்னும் என்னவெல்லாம் கேட்பாரோ என பயத்தில் இருக்கிறது படக்குழு.