Don't Miss!
- Finance
ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்!
- Technology
Jio பயனர்களுக்கு இனி Netflix இலவசம்: ஆக்டிவேட் செய்வது எப்படி?
- News
ரெட் அலர்ட்.. வெள்ள நீரில் மிதக்கும் மும்பை... கொட்டி தீர்த்த கனமழை.. கோவாவிலும் மழையால் மக்கள் அவதி
- Automobiles
பெட்ரோல், டீசல் வண்டிகளை பயன்படுத்த விரைவில் தடை... கால் டாக்சி ஓட்டுபவர்களுக்கு வருகிறது புதிய ஆப்பு!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பாலிவுட் கனவு தகர்ந்தது.. ராசி இல்லாத நடிகையாக ஆகிவிட்டேன்.. இயக்குநர் மீது கடுப்பான நடிகை!
சென்னை : டாப் நடிகையின் பாலிவுட் கனவு தகர்ந்ததால் மூன்றெழுத்து இயக்குநர் மீது கடும்கோபத்தில் இருக்கிறார் அந்த நடிகை.
முதல் படத்திலேயே திறமையான இயக்குநர் என பெயர் எடுத்தவர் அந்த மூன்றெழுத்து இயக்குநர்.
பலரும் இந்த படம் பழைய படத்தின் காப்பி என்ற சொன்னாலும் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இவர் இடம் பிடித்தார்.
பீஸ்ட்டில் விஜய்யின் கேரக்டர் பெயர்... நெல்சன் வெளியிட்ட வேற லெவல் அப்டேட்!

அனைத்து படங்களும் ஹிட்
முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நடிகரை வைத்து தொடர்ந்து 3 திரைப்படங்களை இயக்கினார். அந்த 3 திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மூன்றெழுத்து இயக்குநரை மாஸ் இயக்குநராக மாற்றியது.

ஆரம்பமே சிக்கல்
தெற்கு தேசத்தில் கிடைத்த புகழை வடக்கு பரப்ப நினைத்த அந்த மூன்றெழுத்து இயக்குநர், சூப்பர் ஹீரோ ஒருவருடன் இணைந்து ஒப்பந்தம் போட்டார். பேச்சுவார்த்தை தொடங்கும் போதே கொரோனா 2வது பீதியை கிளப்பியதால் படப்பிடிப்பு தாமதமானது. மேலும், அந்த சூப்பர் ஹீரோவின் மகன் ஒரு பிரச்சனையில் சிக்க படத்தை தொடங்கவே முடியவில்லை.

வருத்தத்தில் இயக்குநர்
சூப்பர் ஹீரோவிடமிருந்த தகவல் வரும் வரும் என்று காத்திருந்து வெறுத்துப்போன அந்த மாஸ் இயக்குநர், நேரடியாக தொலைபேசியில் பேச, அந்த சூப்பர் ஹீரோவோ, பல படங்கள் கையில் இருப்பதாகவும் இந்த படங்களை முடித்தப்பிறகு பார்க்கலாம் என பிடி கொடுக்காமல் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மாஸ் ஹீரோ வருத்தத்தில் இருக்கிறாராம்.

ராசி இல்லாத நடிகை
தெற்கில் டாப் நடிகையாக இருந்தபோதும் வடக்கு பக்கம் போகாமல் இருந்த டாப் நடிகையை, மூன்றெழுத்து இயக்குநர் தான் பேசி சம்மதிக்க வைத்துள்ளார். தற்போது பாலிவுட்டின் கனவு தகர்ந்து விட்டதால், வடக்கில் ராசி இல்லாத நடிகை என்ற பெயர் வந்துவிட்டதே என டாப் நடிகை மூன்றெழுத்து இயக்குநர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். இயக்குநர் போன் செய்த போதும் அவர் எடுக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.