Just In
- 19 min ago
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
Don't Miss!
- Lifestyle
உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...!
- News
ஓவர்நைட்டில் "கேம் சேஞ்ச்".. ஒரே குறி எடப்பாடியார்தான்.. ஸ்கெட்ச் போடும் திமுக.. களமிறங்கும் கருணாஸ்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Sports
மகளிர் டி20 சாம்பியன்ஸ் கோப்பை தொடர்... மகளிர் தினத்துல ஐசிசி ஸ்பெஷலா அறிவிச்சிருக்காங்க!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தயாரிச்ச எல்லா படமும் ஃபிளாப்... அந்த பீரியட் படத்தோட மூட்டை முடிச்சை கட்டிருவாங்களாமே!
சென்னை: அந்த வரலாற்று படத்துடன், தயாரிப்பதை நிறுத்த முடிவு செய்திருக்கிறதாம், அந்த பிரபல சினிமா நிறுவனம்.
தமிழ் சினிமாவில் படத் தயாரிப்புக்கு என்று சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஒரு காலத்தில் இருந்தன. அடுத்து புதிய தயாரிப்பாளர்கள் வந்தார்கள்.
சினிமா பிசினஸ் தெரியாததால் பல தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து, சினிமாவே வேண்டாம் என்று சென்றுவிட்டனர்.

சினிமா பிசினஸ்
இப்போது சினிமா மொத்தமாக மாறிவிட்டதால், ஆரம்ப காலத்தில் இருந்தே படம் தயாரித்து வந்த சில நிறுவனங்கள், படம் தயாரிப்பதை நிறுத்துவிட்டன. சில நிறுவனங்கள் தெலுங்கு மொழிகளில் தயாரித்து வருகின்றன. தமிழ் சினிமா பிசினஸ் மொத்தமாக சிக்கலில் இருப்பதால், பலர் தவித்து வருகின்றனர். இருந்தாலும் அதைக் கைவிட்டுவிடாமல், தயாரித்து வருகிறார்கள் சில மூத்த தயாரிப்பாளர்கள்.

கார்பரேட் நிறுவனம்
பழைய தயாரிப்பாளர்களில், விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே இப்போதும் படம் தயாரித்து வருகிறார்கள். அதுவும் தொடர்ந்து தயாரிப்பதில்லை. இதற்கிடையே சில கார்பரேட் நிறுவனங்கள், தமிழ் சினிமாவில் கால்பதித்து நஷ்டங்களை சந்தித்துவிட்டு, திரும்பியது. பிறகு ஹீரோக்கள், இயக்குனர்களே சொந்தமாக படம் தயாரிக்கத் தொடங்கினர். சிலருக்கு லாபம், சிலருக்கு நஷ்டம்.

மொத்தவும் அவுட்
இந்த நிலையில்தான் வெளிநாட்டில் இருந்து வந்தது, அந்த தயாரிப்பு நிறுவனம். பெரும் பணத்தை வைத்திருக்கும் நிறுவனம் என்பதால், ஏகப்பட்ட படங்களைத் தயாரித்தது. இதில், தமிழ் சினிமாவில் யாருமே யோசித்திராத கோடிகளில் உருவாக்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்களும் உண்டு. இப்படி அவர்கள் தயாரித்த படங்களில் ஒன்றிரண்டை தவிர மொத்தவும் அவுட்.

மீண்டும் மெகா பட்ஜெட்
எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்பது மாதிரி மீண்டும் மெகா பட்ஜெட்டுக்குள் கால் வைத்தது அந்த நிறுவனம். அதில் ஒன்றுதான் சமீபத்தில் விபத்தைச் சந்தித்த அந்த இரண்டாம் பாகம் படம். இதன் பட்ஜெட், சுமார் 200 கோடி ரூபாய் என்கிறார்கள். ஏற்கனவே, விபத்து, அடுத்து கால்ஷீட் பிரச்னை, அதிகமாகும் ஷூட்டிங் நாட்கள் என சிக்கல் இருப்பதால் இந்த படம் லாபம் கொடுக்கும் என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

நம்பிக்கை இல்லை
இதோடு அடுத்து அந்த பீரியட் படத்தையும் அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. அதற்கான பட்ஜெட் கேட்டால், அதுவும் பல கோடிகள் என்கிறார்கள். இப்படி கோடிகளை கொட்டி, எடுக்கப்படும் படங்கள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதால், இந்த படங்களோடு படத் தயாரிப்பை அந்த நிறுவனம் நிறுத்திவிட முடிவு செய்திருக்கிறது என்று பேசுகிறார்கள் கோலிவுட்டில்!