Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 4 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 5 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 5 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
சென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்!
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விபத்துக்குப் பிறகு கோர் கமிட்டி கூடி முடிவெடுக்கப் போகுதாம்...ஷூட்டிங் தொடங்குமோ, தொடங்காதோ?
சென்னை: அந்த விபத்துக்குப் பிறகு, தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் கூடி படத்தை தொடங்குவது பற்றி முடிவெடுக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கடந்த மாதம் ஒரு புதன்கிழமை இரவில் நடந்தது, அந்த விபத்து. யாரும் எதிர்பார்க்காத அந்த விபத்தில் பரிதாபமாக 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சிதான்.
விபத்து நடந்து இவ்வளவு நாட்கள் ஆனாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை படக்குழுவினர்.

விபத்து காரணமாக
அன்று அந்த கிரேன் கொஞ்ச நேரம் முன்பு விழுந்திருந்தால், அந்த மூன்று பிரபலங்களின் உயிருக்கும் பெரிய ஆபத்து வந்திருக்கும் என்ற செய்தி எல்லோருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இயக்குனரும் ஹீரோவும் பண உதவி செய்தாக அறிவித்து உள்ளனர். இந்த விபத்து காரணமாக படத்தைத் தயாரிக்கும் நிறுவனத் தின் உரிமையாளர் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்து இருக்கிறார்.

மீண்டும் ஷூட்டிங்
இந்த விபத்து பற்றி விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் ஹீரோவும் இயக்குனரும் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு வந்திருக்கின்றனர். இந்நிலையில் விபத்து பற்றி சினிமா வட்டாரத்தில் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்குவது பற்றி இன்னும் படக்குழு பேசவில்லை. இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகே ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்பட்டது.

பிரச்னை
இதற்கிடையே, படத்தின் ஹீரோவுக்கும் தயாரிப்புக்கும் பிரச்னை என்றும் இதனால் படம் மீண்டும் தொடங்குவது சந்தேகம்தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில்தான் அந்த தயாரிப்பு நிறுவனத்தின், முக்கிய நிர்வாகிகளை கொண்ட கோர் கமிட்டி, விரைவில் கூட இருக்கிறதாம். இந்த கமிட்டிதான், படத்தை மீண்டும் தொடங்குவதா, தொடங்கினால் ஏற்படும் லாப நஷ்ட கணக்குகள் எப்படி இருக்கும் என்பது பற்றி விவாதிக்க இருக்கிறது என்கிறார்கள்

வேறு படங்களில் பிசி
படத்தின் ஹீரோ, ஏற்கனவே இந்த நிறுவனத்துக்காக ஆரம்பித்த அந்த காமெடி படம், கிடப்பில் இருக்கிறது. இப்போது இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய நடிகர், நடிகைகள் வேறு படங்களில் பிசியாகி விட்டார்கள். அவர்களை மீண்டும் அழைத்து வந்த ஷூட்டிங் நடத்துவது எளிதானதுதானா? அப்படியே ஷூட்டிங்கை தொடங்கினாலும் செலவை சரிகட்ட முடியுமா?

மோசமான நஷ்டம்
படத்தை அந்தளவுக்கு பிசினஸ் பண்ண முடியுமா? என்பது பற்றியும் பேச இருக்கிறார்களாம். அதற்கு பிறகே ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது பற்றி தெரிய வரும் என்கிறார்கள். ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்த சில படங்கள் மோசமான நஷ்டத்தை சந்தித்து இருப்பதால், படத்தை இந்த செலவோடு விட்டுவிடலாமா, தொடங்கலாமா என்பது பற்றி அந்த கோர் கமிட்டிதான் முடிவு செய்யுமாம்!