இனிமே அப்படி மோசமா நடிக்க முடியாது.. வீட்டில் முடங்கிய வாரிசு நடிகை.. சீக்கிரமே திருமணம்?
சென்னை: அந்த பெரிய பஞ்சாயத்துக்குப் பிறகு வாரிசு நடிகையால் வெளியவே தலைகாட்ட முடியவில்லை என்கின்றனர். வீட்டுக்குள் இருந்தாலும் ஃபுல் டிரெஸ் உடன் தான் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் மட்டும் போட்டு வருகிறாராம்.
மகளின் இந்த நிலையை பார்த்த அப்பாவோ ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். இதற்கு மேல் திரையுலகில் தனது மகளுக்கு எங்கே சென்றாலும் தொல்லை தான் கொடுக்கப் போகிறார்கள் என்பதை புரிந்துக் கொண்ட அவர், சட்டுபுட்டுனு திருமணத்தை செய்து வைத்து விடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

மகளிடம் தனது கோரிக்கையை வைக்க, அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டார் என்கின்றனர். காதலர் வீட்டிலும் இதுவரை நடிகைக்கு பிரஷர் ஏதும் இல்லாத நிலையில், நடிகை தலையாட்டிய நிலையில், மணமகன் ரொம்பவே குஷியாகி விட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
என்னை மட்டும் டார்கெட் பண்ணாங்க: ஏகப்பட்ட நடிகைகள் பிட்டு படங்களில் வரும் பெண்களை விட மோசமான உடைகளை அணிந்துக் கொண்டு கன்றாவித்தனமாக நடித்து வரும் நிலையில், அந்த வாரிசு நடிகை மட்டும் அதே பாணியை கையிலெடுத்த நிலையில், அவரை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அசிங்கப்படுத்தி வீட்டுக்குள் முடக்கி உட்கார வைத்து விட்டனர் என பஞ்சாயத்து வெடித்துள்ளது. நடிகையும் என்னை மட்டும் டார்கெட் பண்ணிட்டாங்க என அழுது புலம்பித் தள்ளிவிட்டாராம்.
கூப்டுறதே அதுக்குத்தான்: அந்த நடிகையை படங்களில் கமிட் பண்ண காரணமே அவர் எந்த டிரெஸ் கொடுத்தாலும் அதை விட அதிகமாக கிளாமர் எப்படி காட்டுவது என்பதில் கில்லாடி என்கிற ஒரே காரணத்துக்காகவே அந்த நடிகையை கமிட் செய்து வந்தோம். இனிமேல், அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் தயாரிப்பாளர்களும் மற்ற கிளுகிளுப்பான நடிகைகள் பக்கம் தாவிச் சென்றுவிட்டனர் என்கின்றனர்.
திருமணத்துக்கு ரெடி: இதன் காரணமாக வீட்டிலேயே முடங்கிய நடிகை சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் லீக் ஆகியுள்ளன. தனது மகளின் திருமணத்தை அந்த பெரிய பிரபலம் பிரம்மாண்டமாக நடத்தப் போகிறார் என்கின்றனர். மேலும், மகளை பற்றிய தவறான பேச்சுக்கள் மற்றும் போட்டோக்கள் என எதுவுமே சோஷியல் மீடியாவில் பரவக் கூடாது என டிஜிட்டல் டீமுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications