அண்ணனைத் தொடர்ந்து தம்பி... தனி மரமான தயாரிப்பாளர்!
பசுமை நிறுவனம் தொடங்கப்பட்டதே அண்ணன் தம்பி இரண்டு ஹீரோக்களுக்காகவும் தான். அவர்களது உறவினர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் தொடங்கி நிர்வகித்து வந்தார்.
பின்னர் என்ன ஆயிற்றோ அண்ணன் நடிகர் தனியாக ஒரு நிறுவனம் தொடங்கினார். கணக்கு வழக்கு பிரச்னை என்று ஒரு தகவல் வந்தது. அண்ணனுக்கு வந்த கதைகளை தம்பி பக்கம் திருப்பி விட்டார் தயாரிப்பாளர். அதனால்தான் அண்ணன் தனி நிறுவனம் தொடங்கினார் என்றும் சொன்னார்கள். தம்பி நடிக்கும் படங்களை பசுமை நிறுவனம் தயாரித்து வந்தது. இப்போது என்ன ஆயிற்றோ தெரியவில்லை. தம்பியும் அந்த தயாரிப்பாளரைக் கழற்றி விட்டார்.
அண்ணனது நிறுவனத்தில் அடுத்து படம் நடிக்கப்போகிறாராம். அறிவிப்பு வந்துவிட்டது. தயாரிப்பாளர் இப்போது தனிமரமாகி விட்டார் என்கின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications