சம்பளமும் வரலை... கால்ஷீட்டும் தரலை... அதோகதியில் இயக்குநர்!
அந்த பெரிய நடிகரை வைத்து மூன்றாவது படத்தை இயக்கிவிட்டு நான்காவது படத்துக்கும் துண்டு போட்டு வைத்திருந்த இயக்குநர், தனது இடம் பறிபோனதால் அதோகதியில் நிற்கிறாராம்.
இந்தப் படம் ரிலீஸானதும் அடுத்த படத்தை தொடங்கலாம் என்று நடிகர் வாக்கு கொடுத்திருந்தாராம். ஆனால் படம் ரொம்பவே சுமாராக போனதால் இயக்குநரை கண்டுகொள்ளவில்லையாம். சம்பள பாக்கியையும் வாங்க முடியவில்லையாம் இயக்குநரால். தயாரிப்பாளரிடம் சொல்லி பேச முயன்றால் கூட நடிகர் லைனுக்கே வருவதில்லையாம்.
'அவர் சொன்ன மாதிரிதானே எடுத்தேன். எடுத்ததைப் பார்த்த பிறகு சூப்பர்னுதானே சொன்னார். இப்போ அவரே சப்போர்ட் பண்ணலைன்னா எப்படி?' என்று புலம்பி வருகிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications