நல்ல கதையோட வாங்க... காத்திருக்கும் நடிகை
சினிமாவில் பிரபலமாக இருந்த போதே உதவி இயக்குநரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் முருகனின் முதல் மனைவியின் பெயரைக் கொண்ட நடிகை. இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.
சூர்ய டிவி பக்கம் வந்தவரை இல்லத்தரசிகள் வரவேற்று ஏற்றுக்கொண்டனர். அபி அபி என்று கொண்டாடினர். எத்தனையோ சீரியல்களில் நடித்தாலும் முதல் சீரியல்தான் அவரின் மனம் கவர்ந்த சீரியலாம்.

என்ன காரணமோ சூர்ய டிவியில் இரட்டை வேடத்தில் நடித்த சீரியலில் இருந்து திடீரென்று வெளியேறினார். கணவரை ஹீரோவாகப் போட்டு நடித்த படம் பிளாப் ஆனதில் வருத்தமடைந்த அவர், பி.ஏ., படிக்கிறார், டீச்சராகிவிட்டார் என்றெல்லாம் செய்தி வெளியானது. ஆனாலும் கேப்டனின் மகன் படத்தில் சில காட்சிகளில் தலைகாட்டினார். தற்போது சீரியலில் நடிக்க ஆர்வத்தோடு இருக்கிறாராம். ஆனாலும் கதை சொல்ல வருபவர்கள் எல்லாம் பழைய கதையோடுதான் வருகிறார்களாம்.
ஆனால் நல்ல கதையோட வாங்க நடிக்கிறேன் என்று திருப்பி அனுப்பும் தேவ நடிகை, அதுவரை விளம்பரங்களிலும், கிடைக்கும் படங்களிலும் தலை காட்டுவோம் என்று முடிவு செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











