Don't Miss!
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏன்தான் தேவையில்லாத கிசுகிசு வருதோ? - பாலா பட நாயகி புலம்பல்
அதர்வாவை நாயகனாக வைத்து 'பரதேசி' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதில் நாயகியாக வேதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதல் கட்ட படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்துவிட்டார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இந்த நிலையில் வேதிகாவை படத்தில் இருந்து பாலா நீக்கி விட்டதாக தகவல் வெளியானது. வேதிகா இதுவரை நடித்த காட்சிகளைப் பார்த்த போது திருப்தி ஏற்படவில்லையாம். சரியாக நடிக்கவில்லை என்று அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி எறிந்து விட்டதாகவும், அவருக்குப் பதில் பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதனை மறுத்துள்ளார் வேதிகா. "பாலா படத்திலிருந்து என்னை நீக்கியதாக சொல்லப்படுவது வெறும் வதந்தி. அவர் படத்தில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க இருக்கிறேன். பாலா சார் படத்தில் நடிப்பது மறக்க முடியாத அனுபவம். உண்மையை திரித்து என்னைப்பற்றி ஏன் இப்படி கிசு கிசுக்கள் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை," என்றார்.