ஏன்தான் தேவையில்லாத கிசுகிசு வருதோ? - பாலா பட நாயகி புலம்பல்
அதர்வாவை நாயகனாக வைத்து 'பரதேசி' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதில் நாயகியாக வேதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதல் கட்ட படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்துவிட்டார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இந்த நிலையில் வேதிகாவை படத்தில் இருந்து பாலா நீக்கி விட்டதாக தகவல் வெளியானது. வேதிகா இதுவரை நடித்த காட்சிகளைப் பார்த்த போது திருப்தி ஏற்படவில்லையாம். சரியாக நடிக்கவில்லை என்று அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி எறிந்து விட்டதாகவும், அவருக்குப் பதில் பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதனை மறுத்துள்ளார் வேதிகா. "பாலா படத்திலிருந்து என்னை நீக்கியதாக சொல்லப்படுவது வெறும் வதந்தி. அவர் படத்தில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க இருக்கிறேன். பாலா சார் படத்தில் நடிப்பது மறக்க முடியாத அனுபவம். உண்மையை திரித்து என்னைப்பற்றி ஏன் இப்படி கிசு கிசுக்கள் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications












