Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அந்த ஹீரோயினுக்கும் கணவர் குடும்பத்துக்கும் சிக்கலாம்! நடிகை மவுனத்துக்கு இதுதான் காரணமாமே?
சென்னை: பிரபல ஹீரோயினுக்கும் அவரது காதல் கணவர் வீட்டுக்கும் பிரச்னை என்று சொல்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கிறார், அந்த ஹீரோயின். இரண்டு மொழி படங்களிலும் சமமாக நடித்து வருகிறார்.
விவாகரத்தான தமிழ் ஹீரோவை காதலித்து வந்தார். திருமணம் வரை சென்ற நிலையில் கருத்து வேறுபாடு.
சில்லறையை போட்டு பேசலாமா.. முன்னழகை காட்டிய நடிகையை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!
திருமணம்
அந்த ஹீரோவை அப்படியே கழற்றி விட்டுவிட்டு, தெலுங்கு ஹீரோவை காதலிக்கத் தொடங்கினார், ஹீரோயின். அந்த ஹீரோ பெரிய இடத்துப்பிள்ளை. சில வருடக் காதல் இன்னும் அதிகரித்தது. குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்ட, இருவீட்டு சம்மதத்துடனும் திருமணத்தில் முடிந்தது, காதல். பிரமாண்டமாக 3 நாட்கள் நடந்த திருமணத்தில் திரையுலகினர்ர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திடீர் அமைதி
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார், ஹீரோயின். இந்நிலையில் நடிகை திடீரென அமைதியாகி விட்டார். எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர், கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்கிறார். வழக்கமாக குடும்ப உறுப்பினர்களின் பர்த் டே என்றால் முதல் ஆளாக வாழ்த்தும் நடிகை, இப்போது அப்படி செய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
ஆச்சரியம்
நடிகையின் காதல் கணவருடைய தம்பிக்கு சமீபத்தில் பர்த் டே. அவரும் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு பல வழிகளில் உதவி வந்தவர், இந்த நடிகை. அதனால், எப்போதும் அவர் பர்த் டேவுக்கு முதல் ஆளாக வாழ்த்தி ட்வீட் போடும் நடிகை, இப்போது அப்படி செய்யவில்லை. இது ஏன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்கள்.
அதிகரிக்கும் சந்தேகம்
இதையடுத்துதான் நடிகைக்கும் அவரது கணவர் குடும்பத்துக்கும் சுமூக உறவு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறதாம். ஊரடங்கு உத்தவரவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்ய ஏராளமானோர் முன் வந்துள்ள நிலையில், நடிகை அமைதி காப்பதும், சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது என்கிறார்கள். என்னன்னு தெரியலயே?