இது வதந்தியா, நிஜமான்னு தெரியலையே...??
இப்படி ஒரு செய்தி கோலிவுட்டில் ஹாட்டாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நிஜம்தாங்க என்று சிலர் உறுதிபடக் கூறுகிறார்கள். பலரோ இருக்க வாய்ப்புண்டு என்று பட்டும் படாமலும் சொல்கிறார்கள். சிலர் இதைத் தெரிஞ்சு நமக்கு என்ன ஆகப் போகிறது என்கிறார்கள்.
செய்தி இதுதான் - 3 நடிகர்களின் நட்புக் கரங்களுக்குள் தவழ்ந்து வந்த நடிகை இப்போது 4வது நட்புக் கைக்கு மாறியுள்ளார் என்பதுதான் அந்த செய்தி.
"ஐயோ"வென்று காணப்பட்ட நடிகைகளுக்கு மத்தியில் "ஹய்யா" என்று சொல்லும் அளவுக்கு அழகாக, பாந்தமான முகத்துடன் நடிக்க வந்தவர் இந்த கேரளத்து நடிகை. வந்த வேகத்தில் தமிழ் மனங்களில் கப்பென்று அமர்ந்து கொண்டு வேகமாக உயர்ந்தார்.
இந்த வேகத்துக்கு மத்தியில் முதல் காதல் வந்தது. வம்பு பேசிய வாய்களுக்கு அவல் கொடுப்பதைப் போல இந்த காதல் படு வேகமாக வளர்ந்தது. ஆனால் அதே வேகத்தில் சரிந்தும் போனது.
ஆனால் சரிந்து போய் விடாமல் சுதாரித்து எழுந்த அந்த நடிகை, கீழே விழுந்து சுதாரித்து எழும் "டான்ஸர்" போல அடுத்த காதலுக்குள் புகுந்தார். இந்த காதல் டான்ஸும் கூட நன்றாகவே போனது... ஏன், கல்யாணம் வரைக்கும் கூட போய் விட்டது. இடையில் நடந்த சில பல சமாச்சாரங்களால் இந்தக் காதல் நடனம் பாதியிலேயே அலங்கோலமாகிப் போனது.
ஆனாலும் அவுட்டாகி விடாமல், கோடம்பாக்கம் ஏரியாவில் புதுக் காதலை வளர்க்க ஆரம்பித்தார் இந்த நடிகை. சூப்பர்யா என்று என்று சக நடிகர்களே பொறாமைப்படும் அளவுக்கு அந்த நடிகரும், நடிகையை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் இந்தக் காதலும் கூட "பாஸ்" ஆகாமல் பெயிலாகிப் போனது.
இப்படி அடுத்தடுத்து மூன்று முறை கீழே விழுந்தும் கூட நடிகையின் காதல் வேட்டையில் சற்றும் தொய்வில்லை என்று கூறுகிறார்கள். காரணம், தற்போது நான்காவது நட்புக் கரங்களுக்குள் நடிகை விழுந்துள்ளாராம். அவர் ஒரு மார்க்கெட் இல்லாத நடிகர்.. ஆனால் நல்ல உடல்கட்டுடன் கூடியவர். இரு பெயர் அவரது ஒரு பெயரில் அடக்கம். நடித்தது சில படங்கள்தான்.. ஆனால் அவரது நட்பு வட்டமோ பல இடங்களில் பரவி வியாபித்துள்ளதாம். சத்யராஜ் உயரம், சத்தாய்க்கும் தோற்றம்... இவர்தான் தற்போது நடிகையுடன் நட்பாகப் பழகி வருகிறாராம்.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை... எல்லாம் அந்த "ஏழுகொண்டலவாடா கோவிந்தா கோவிந்தாவுக்கே" வெளிச்சம்!


Click it and Unblock the Notifications











