Don't Miss!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மூன்று மணி நேரம் உட்கார முடியுமா? ஹீரோ கேட்ட கேள்வியால் முழி பிதுங்கிய இயக்குநர்!
பண்டிகை நாளன்று வெளியாக திட்டமிடப்பட்டுள்ள அந்த விளையாட்டு படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் ரசிகர்களை அது என்கேஜ் பண்ணுமா என அந்த ஹீரோ கேட்டுள்ளாராம்.
சென்னை: தமிழ் நாட்டின் மாஸ் ஹீரோவின் படம் அந்த பெரிய பண்டிகை நாளன்று வெளியாகுமா இல்லையா என்ற நிலையில் சட்ட சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருப்பதால் அதுவரை தனது ரசிகர்களை தியேட்டரில் என்கேஜாக உட்கார வைக்க முடியுமா என அந்த மூன்று எழுத்து இயக்குநரிடம் ஹீரோ கேட்க, என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம் அந்த இயக்குநர்.
அந்த இயக்குநர் இதுவரை எடுத்த படங்கள் காப்பி கதைகள் என்ற பட்டம் வாங்கியுள்ள நிலையில், இந்த படமும் பிரபல பாலிவுட் படம் என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் இது அந்த பாலிவுட் படத்தை தழுவி எடுக்கவில்லை என சாதித்து வருகின்றனர்.
படத்தின் கதை தனது என்று தற்போது புதிதாக ஒருவரும் கிளம்பியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கை விரைவில் முடித்துவிட்டு, பண்டிகை தினத்திற்கு படத்தை ரிலீஸ் செய்ய எல்லா முயற்சியிலும் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிரைலரிலேயே பல்லிளித்துள்ள நிலையில், படத்தின் நீளம் மூன்று மணி நேரமாக இருப்பதால், படம் வெளியான பிறகு, 20 நிமிட காட்சிகள் வரை வெட்ட நேரிடலாம் என்ற பயமும் படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளதாம்.
பாடல்கள் இடத்தை பெரிதாக அடைக்கவில்லை என்றாலும், தேவையில்லாத பில்டப் ஷாட்டுகள், படம் நெடுகிலும் இருப்பதாகவும், அதனை இன்னமும் கருணை காட்டாமல் எடிட் செய்தால், ரசிகர்கள் அடிக்கடி இன்டெர்வெல் எடுக்காமல் தியேட்டரில் உட்காருவார்கள் என அந்த ஹீரோவுக்கு நெருங்கியவர்கள் காது கடிக்க, இயக்குநரிடம் இந்த கேள்வியை அந்த மாஸ் ஹீரோ கேட்டுள்ளாராம்.
சிஜி பணிகளில் உள்ள ஓட்டைகளை ஒட்ட வைத்து வரும் இயக்குநர், தணிக்கை சான்றிதழ் கிடைத்த பின்னர், நாயகனிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி எழுந்துள்ளதால், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பி உள்ளாராம்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க