அந்த பிரச்சனையை திசை திருப்ப உருண்ட நடிகையின் தலை?.. எல்லாத்துக்கும் காரணம் அவர் தானா?..
சென்னை: திடீரென பிரபல நடிகை பற்றி காட்டுத்தீ போல அபாயகரமான செய்தி ஒன்று பரவ காரணமே அந்த பிரபலம் தான் என்கின்றனர். கடந்த சில நாட்களாகவே அந்த பிரபலம் பற்றிய சர்ச்சை பேச்சுக்களே தேசியளவில் டிரெண்ட் ஆகி வந்த நிலையில், அதை மடைமாற்றவே இப்படியொரு வதந்தியை திட்டமிட்டே ஐடி விங் செய்துள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை மீது எந்தவொரு சண்டையோ, சர்ச்சையோ இல்லாத நிலையில், திடீரென அந்த நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிப்பதற்கு காரணமே அந்த பிரபலம் தான் என்கின்றனர்.

ஒரு டிரெண்டிங்கை முறியடிக்க இன்னொரு டிரெண்டிங்கை ஆரம்பித்து வைத்தால் போதும் அப்படியே பரபரப்பு வேறுவிதமாக மாறிவிடும் என சினிமாவில் காட்டுவதை போலவே நிஜத்திலும் அந்த சம்பவத்தை நடத்தி விட்டனர் என்கின்றனர்.
நடிகையின் சோலியை முடித்து: நல்லா இருக்கும் அந்த நடிகையை தேவையில்லாமல் திடீரென சோலியை முடித்து குறிப்பிட்ட சில ட்விட்டர் பிரபலங்கள் பற்ற வைத்த நெருப்பு தேசியளவில் பூகம்பமாக வெடித்துள்ளது. இதற்கு பின்னால் பெரும் அரசியலே இருக்கு என்கின்றனர் சில சினிமா பிரபலங்கள்.
சர்ச்சையை திசை திருப்ப: ஒரு பெரிய சர்ச்சையை திசை திருப்ப நம்பியார் காலத்து டெக்னிக்கை ஐடி விங்கை வைத்து அந்த பிரபலம் பண்ண வேலை தான் தற்போது திட்டமிட்டபடியே கொழுந்து விட்டு எரிவதாக கூறுகின்றனர். ஃபேக் நியூஸ் என அடுத்த டிரெண்டிங்கையும் திட்டமிட்டபடியே போட்டு டோட்டலாக அந்த சிக்கலில் இருந்து அந்த பிரபலம் நைஸாக எஸ்கேப் ஆகி உள்ளார் என்றும் முக்கிய புள்ளி ஒருவர் பேசியுள்ள தகவல் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அதை மறந்துட்டாங்க: மக்களும் நடிகை பற்றி தீயாக செய்தி பரவிய நிலையில், அந்த மேட்டரையே மறந்து விட்டு தற்போது இதை பற்றி பல ட்வீட்களை போட்டு டிரெண்டிங் தீயில் வெந்து கொண்டிருக்கின்றனர் என்பதை எல்லாம் பார்க்கவே காமெடியாக இருக்கு என அந்த பிரபலம் பேசியுள்ளார். இந்த பிரச்சனை இன்னைக்கு முழுவதும் ஓடினாலே அடுத்த பிரச்சனை ஒன்று உருவாகி விடும் என்றும் அதன் பின்னாடி அப்படியே நெட்டிசன்கள் கவனம் திரும்பி விட்டால் எல்லாம் சுமூகமாக முடிந்து விடும் என்கின்றனர். இப்படி எத்தனை முறை எத்தனை பிட்டுகளை போட்டிருப்பார்களோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











