இரண்டுமே பொட்டப்புள்ள: நடிகை கணவரை பிரிய இது தான் காரணம்?
சென்னை: கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ள நடிகை ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காததால் தான் பிரச்சனை என்று கூறப்படுகிறது.
தல, தளபதி, ஸ்டைல் நடிகர், முத்த நாயகன் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்த நடிகை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட நடிகை இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் கணவரை பிரிந்திருக்கும் நடிகை அவருடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் கணவரிடம் இருந்து ஜீவனாம்சமும் கேட்டுள்ளார். இந்நிலையில் ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காததால் தான் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஆண் குழந்தை விவகாரம் தொடர்பாக கணவரும், அவரது குடும்பத்தாரும் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











