Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வேர்ல்ட் ஹீரோவுக்கும் தயாரிப்புக்கும் மீண்டும் பிரச்னையாமே... எங்க போய் முடியப்போகுதோ தெரியலையே?
சென்னை: அந்த இரண்டாம் பாகப் படத்தில் நடித்து வருகிறார், வேர்ல்ட் ஹீரோ. முதல் பாகம் ஏற்கனவே ஹிட்டடித்திருப்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது அந்தப் படத்தின் மீது.
முதல் பாகத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனரே, இதையும் இயக்கி வருகிறார். இரண்டு இளம் ஹீரோயின்கள், ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வந்தது. லண்டன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது, பணத்தை தண்ணியாகச் செலவழித்து.
என்னவொரு வில்லத்தனம்... முதன்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் விஜய் ஆண்டனி... கர்நாடகாவில் ஷூட்டிங்
திடீர் மோதல்
இப்போது ஹீரோவுக்கும் தயாரிப்பு தரப்புக்கும் திடீர் மோதல் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு.
இதுக்கான காரணம் பற்றி ஆளாளுக்கு ஒன்றை சொல்கிறார்கள்.
பணப்பிரச்சனை?
ஹீரோ இன்னும் கொஞ்சம் பணம் கேட்டதாகவும் ஏற்கனவே அதிகமாகக் கொடுத்துவிட்டோம் என்று அவர்கள் தரப்பில் சொன்னதாகவும் தகவல்.
காமெடி படம்
ஏற்கனவே இந்த ஹீரோ, அந்த நிறுவனத்தின் தயாரிப்பில், சாதிபெயரை பின்பாதியில் கொண்ட காமெடி படத்தை எடுத்தார். அமெரிக்காவில் போய் ஷூட் பண்ணிவிட்டு வந்தார்கள் படத்தை.
பெட்டிக்குள்
ஆனால், அந்தப் படம் அப்படியே பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு ஹீரோ மேலும் பணம் கேட்டதால் பிரச்னை என்று கூறப்படுகிறது.