செல்போனில் பேசப் பயப்படும் ஜனனி!

பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த 2 கதாநாயகிகளில் ஒருவர் ஜனனி ஐயர். அவர் செல்போன் மணி ஒளித்தால் அதை எடுத்துப் பேச பயப்படுகிறாராம். அவரது படங்களைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் ஜனனியை போனில் அழைத்து பாராட்டுகிறார்களாம்.
அட பாராட்டத் தான செய்றாங்க, அதுக்கு எதற்கு பயப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா. புகழ்வதெல்லாம் புகழ்ந்துவிட்டு கண்டபடி பேசுகிறார்களாம். அதனால் ஜனனிக்கு ஒரே வருத்தமாம். என்னடா இப்படி பேசுறாங்களேன்னு.
இந்த நம்பர் இருந்தா தானே என்னை அழைப்பார்கள் என்று நினைத்து சிம் கார்டை அம்மாவிடம் கொடுத்துவிட்டார். அவர் வேறொரு நம்பர் வாங்கிவிட்டார். அது என்ன நம்பர் என்று கேட்கிறீர்களா? அட போங்கப்பா, மறுபடியும் மொதல்ல இருந்தா...!
Comments


Click it and Unblock the Notifications