Don't Miss!
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜோவுக்கு பதில் த்ரிஷா
விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் ஜோடியாக நடிக்க ஜோதிகா மறுத்து விட்டதால்தான் த்ரிஷாவைப் போட்டிருக்கிறார்களாம்.
திருமலையில் ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்ததால் படம் திருப்தியாக ஓடியதாகக் கருதிய விஜய், திருப்பாச்சி படத்தில் ஜோதிகாவை ஜோடிசேர்க்க தனிப்பட்ட முறையிலும், இயக்குநர் மூலமாகவும் முயன்று பார்த்தார். ஆனால் ஜோதிகா நோ சொல்லி விட்டார்.
தனக்கு திருமணம் நடக்கப் போவதாகவும், அதனால் புதிய படங்களை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் விஜய்யிடம் ஜோதிகாதெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே த்ரிஷாவை ஜோடியாக்கினார்கள்.
திருமணத்தைக் காரணம் காட்டி ஜோதிகா எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது த்ரிஷாவுக்கு இணையாக தமிழில்மார்க்கெட் இருக்கும் ஒரே நடிகை ஜோதிகாதான்.
அதனால் ஜோதிகா புதுப்படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருந்தது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்டது.
இதுவரை சூர்யா- ஜோதிகா காதலுக்குத் தடையாக இருந்தது சூர்யாவின் அப்பா சிவக்குமார்தான். இப்போது அவரும் பச்சைக்கொடிகாட்டிவிட்டார் என்றும், விரைவில் டும்டும் தான் என்றும் பேசப்படுகிறது.
இந் நிலையில் இப்போது மீண்டும் ஜோதிகா நடிக்க வந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாலாவுக்காக சூர்யாகேட்டுக்கொண்டதால் மாயாவியில் நடிக்கும் ஜோதிாக வேறு படங்களை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று தெரிகிறது.
இந்தப் படம் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படம் ரிலீசுக்குப் பிறகு சூர்யா, ஜோதிகா திருமணம் நடக்கலாம்.