Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கீர்த்தியின் காதல்!
பாக்யராஜின் மகன் சாந்தனுவுக்கும், கீர்த்தி சாவ்லாவுக்கும் இடையே காதல் பூத்து, நெருக்கம் அதிகமாகிவருகிறதாம். இயக்குநரின் குடும்பம் இதை பெரும் கவலையோடு கவனித்துக் கொண்டுள்ளதாம்.
பாக்யராஜ், பூர்ணிமா தம்பதியின் மகள் நடிகையாகி விட்டார். அப்பாவின் இயக்கத்தில் முதல் படத்தை முடித்துவிட்ட அவர் இப்போது மலையாளத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.அடுத்த வாரிசான மகன் சாந்தனுவையும் நடிகராக்க பாக்யராஜ், ஆயத்தமாகி வருகிறார். முதலில் சாந்தனுதான்நடிகராயிருப்பார். ஆனால் அதில் கொஞ்சம் தாமதமாகவே மகள் முதலில் நடிகையாகி விட்டார். விரைவில்சாந்தனுவை தனது இயக்கத்திலேயே நடிகராக்க திட்டமிட்டுள்ளார் பாக்யா.
இப்போது மேட்டர் என்னவென்றால் சாந்தனுவும், நடிகை கீர்த்தி சாவ்லாவும் படு நெருக்கமாக பழகவருகிறார்களாம். இதனால் பாக்யராஜும், பூர்ணிமாவும் கவலையில் மூழ்கியுள்ளனராம்.
பூர்ணிமாதான் அதிக கவலையுடன் இருக்கிறாராம். சாந்தனுவிடம் இதுகுறித்து கேட்டால், நாங்கள் சாதாரணநண்பர்கள் தான். எங்களை சந்தேகப்பட வேண்டாம் என்று கூறுகிறாராம் சாந்தனு. ஆனால் பாக்யராஜ் தனதுமகனிடம் இந்த விஷயம் குறித்து இதுவரை பேசவில்லையாம். மாறாக பல்வேறு வழிகளில் தனது மகனை வாட்ச்செய்து வருகிறாராம்.
சாந்தனு இப்படிச் சொன்னாலும் கூட, அவரும், கீர்த்தியும் பழகுவதைப் பார்த்தால், காதல் முற்றி வருவதாகத்தெரிகிறது என கோலிவுட்டில் டாக் உலவுகிறது. மகனின் போக்கால், கவலை அடைந்துள்ள பாக்யராஜ் குடும்பம்,இந்தப் பிரச்சினை எப்படி சமாளிப்பது என குழப்பமாக உள்ளதாம்.
சாந்தனு இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் கிசுகிசுவில் சிக்கி விட்டார். அடுத்து என்னென்னபரபரப்பு கொடுக்கப் போகிறாரோ!