சொந்தக்காரங்களை நம்பாதே... மாமனார் அட்வைஸை ஃபாலோ பண்ணும் மருமகன்!!
மாமனாரை வைத்து படம் தயாரிக்கும் மருமகன் மீது செம காண்டில் இருக்கிறார்களாம் அவரது அண்ணனும் அப்பாவும்.
வரிசையாக படங்கள் தயாரிக்கிறார்... எல்லாமே பெரிய பட்ஜெட்டில்... ஆனால் நாங்கள் இயக்கிய படங்கள் எல்லாம் பஞ்சாயத்தில் மாட்டித் தவிக்கின்றன. ஒரு வார்த்தை சொன்னால் மட்டும் போதும். எல்லா சிக்கலும் தீர்ந்து விடும் என்று புலம்புகிறார்களாம்.
'சொந்தக்காரங்களை நம்பி இறங்காதே....' என்பது மாமனார் மருமகனுக்கு கொடுத்த அட்வைஸாம். இதை அப்படியே கடைப்பிடிக்கிறாராம் மருமகன்.
இதே போல் சண்டக்கோழியின் அண்ணி நடித்த படமும் சிக்கலில் மாட்டி கிடப்பில் கிடக்கிறது. அதை தலைவராக இருக்கும் மச்சினன் கண்டுகொள்ளவில்லை என்று அண்ணிக்கு வருத்தமாம்.
Comments


Click it and Unblock the Notifications