'பூ' இருந்த கட்சியைக் குறி வைக்கும் 'மச்சான்ஸ்' நடிகை!
சென்னை: பூ உதிர்ந்து வந்த கட்சியில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க மச்சான்ஸ் நடிகை முயற்சி செய்கிறாராம்.
மச்சான்ஸ் நடிகை அரசியலுக்கு வருவேன் என்று முன்பு கூறியிருந்தார். ஆனால் எந்த கட்சியில் சேர்வது என்பது பற்றி மட்டும் அவர் தெரிவிக்கவில்லை. அவரின் சொந்த மாநிலத்தில் பூ சின்னம் கொண்ட கட்சி ஆட்சி செய்வதால் நடிகை அந்த கட்சியில் சேரலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகை ஒரு பூ நடிகை வெளியே வந்த கட்சியை குறி வைத்துள்ளாராம். மச்சான்ஸ் நடிகை ரியல் எஸ்டேட் தொழில் செய்வது அனைவரும் அறிந்ததே. அந்த தொழில் மூலம் அவருக்கு கட்சிக்காரர்கள் சிலர் பழக்கமாகியுள்ளனர். அவர்கள் மூலம் தான் அந்த கட்சியில் சேர முயற்சிக்கிறாராம் நடிகை.
நடிகை பற்றி சிலர் கட்சியின் தளபதியிடம் கூறியுள்ளனர். அவரோ நம் கட்சியில் நடிகைகள் வேண்டாம். தேர்தல் நேரத்தில் வேண்டும் என்றால் பிரச்சாரத்திற்கு அழைப்போம். அவர் பிரச்சாரம் செய்ய உரிய சம்பளம் அளிப்போம் என்று தெரிவித்துள்ளாராம்.
இருந்தும் மச்சான்ஸ் நடிகை மனம் தளராமல் பூ உதிர்ந்த இடத்தை பிடிப்பதில் குறியாக உள்ளாராம்.


Click it and Unblock the Notifications