என்னுடைய உள்ளாடையை கூட விட்டுவைக்கல..புலம்பும் மலையாள நடிகை!
சென்னை: பிரபலமான நடிகை ஒருவர் தன்னுடைய உள்ளாடையைக் கூட விட்டுவைக்காமல் எடுத்துச்சென்றுவிட்டதாக விவகாரமான புகாரை கூறியுள்ளார்.
மலையாள நடிகையான இவர் சினிமாவிற்கு வந்த புதிதில் கிடைத்த சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன், பின் சில மூத்த நடிகர்களுக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

படவாய்ப்பு இல்லாமல் இருப்பதற்கு ஏதோ கிடைத்த படங்களில் நடித்தால், திரையில் ஒரு ஓரத்திலாவது முகம் தெரியுமே என கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
கவர்ச்சி மாறிய நடிகை: வயதில் சிறிய நடிகையாக இருந்தாலும், வயதான நடிகர்களுடன் நடித்தால், தொடர்ந்து மனைவி,அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்களே வந்ததால், டென்ஷனான அந்த மலையாள நடிகை இனிமே அண்னியும் இல்லை, அக்காவும் இல்லை என கவர்ச்சி ரூட்டுக்கு மாறி, ஒல்லி நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு இறங்கி ஆட்டம் போட்டார்.
விவகாரமான புகார்: பாட்டு ஹிட்டான போதும், மலையாள நடிகைக்கு பெரிசாக வாய்ப்பு வராததால், அக்கட தேசத்திற்கு சென்றார். அங்கே ஒரு சில படங்களில் நடித்த பின், ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார். தற்போது, அந்த அம்மணி விவகரமான புகார் ஒன்றை கூறியுள்ளார்.
திருடிச்சென்றனர்: அதாவது, கோவாவில் இருக்கக்கூடிய என்னுடைய வீட்டில் கணவன் மனைவி வசித்து வந்தார்கள். அந்த தம்பதிகள் பல மாதமாக வாடகை தராமல் என்னை ஏமாற்றிவிட்டு, என் வீட்டின் மேல் அறையில் பிரோவில் வைத்திருந்த துணிகள், செருப்பு, உள்ளாடைகளைக் கூட திருடுச் சென்றுவிட்டனர்.
புலம்பும் நடிகை: இதுமட்டுமில்லாமல் அக்கம் பக்கத்தினரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணத்தையும் ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் காவல் நிலையில் புகார் கொடுத்துவிட்டதால், மலையாள நடிகை தற்போது வம்பில் சிக்கி உள்ளார். ஏற்கனவே படவாய்ப்பு இல்லாமல் அவமதிப்பட்டு வரும் நடிகை இப்போது காவல்நிலையத்திற்கு அலைந்து கொண்டு இருக்கிறராம்.


Click it and Unblock the Notifications











