ஆண் நண்பருடன் லிவிங் டுகெதரில் உள்ளாரா மலையாள நடிகை? புகைப்படத்தால் வெளியான பரபரப்பு!
சென்னை: கோலிவுட்டில் பிசி ஹீரோயினாக நடித்து வந்த அந்த மலையாள நடிகை ஆண் நண்பர் ஒருவருடன் லிவிங் டுகெதராக வாழ்ந்து வருவதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.
மலையாள நடிகை என்றாலே அப்படித் தானே என பலரும் சர்வ சாதாரணமாக அவர்கள் விவகாரம் பற்றி பேச வர காரணமே அந்த நடிகை தனது ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தது தான் என்றும் கூறுகின்றனர்.
சிறு வயது முதலே இருவரும் நண்பர்கள் என்றும் நண்பரின் உதவியால் தான் சினிமா வாய்ப்பே அவருக்கு கிடைத்ததாகவும் ஏகப்பட்ட தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாக தொடங்கி இருக்கின்றன.

மலையாள நடிகைகள்
கோலிவுட்டில் ஏகப்பட்ட மலையாள நடிகைகள் அந்த காலம் தொட்டு இன்று வரையில் கொடி கட்டி பறந்து வருகின்றனர். தமிழ் பெண்களை விட கேரள பெண்களுக்கே இங்கே ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாக உள்ளதா? இல்லை இயக்குநர்களுக்கு கேரள பெண்கள் மீது ரசனை அதிகமாக உள்ளதா என்றே தெரியவில்லை தொடர்ச்சியாக கேரளாவில் இருந்தே ஹீரோயின்களை அதிக அளவில் களமிறக்கி வருகின்றனர்.

தாராளமாக கவர்ச்சி
அவர்களும் ஆரம்பத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து விட்டு பின்னர் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் போல டாப் ஹீரோயின்களாகவும் மாறி விடுகின்றனர். முன்னணி நடிகர்களும் அதிக அளவில் பிற மாநில நடிகைகளுக்கே வாய்ப்புகளை வாரி வழங்கி வருவதால் ஏகப்பட்ட கேரள நடிகைகளின் வரவு இங்கே அதிகமாக உள்ளது.

புது வரவு
அந்த வரிசையில் புது வரவாக வந்துள்ள அந்த கேரள நடிகைக்கு ஆரம்பமே பெரிய தலைகளுடன் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் ரொம்பவே சந்தோஷமாக இருக்கும் அந்த நடிகை சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர பலரும் பயன்படுத்தும் யுக்தியான போட்டோஷூட்களை அடிக்கடி நடத்தி அதிகளவில் போட்டு வருகிறார்.

உள்ளாடைகளுடன்
அடிக்கடி வெறும் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து கொண்டு அவர் வெளியிடும் ஹாட் போட்டோக்களை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போல அந்த அளவுக்கு கவர்ச்சியின் உச்சிக்கே சென்று போட்டோக்களை பதிவிட்டு அதகளம் செய்து வருகிறார் அந்த நடிகை.

லிவிங் டுகெதர்
பல்வேறு மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் அந்த நடிகை ஆண் நண்பர் ஒருவருடன் தனியாக வீடு எடுத்து லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக சில ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நடிகை வெளியிட்டுள்ள சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் இந்த பேச்சை பெரிதுப்படுத்தி வருகின்றன.

ஆண் நண்பருடன்
ஆண் நண்பரை கட்டித் தழுவி மிகவும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை சமீபத்தில் அந்த மலையாள நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் இவரை காதலிக்கிறீங்களா? எப்போ திருமணம் என பல்வேறு கேள்விகளையும் அடுக்கி உள்ளனர்.

நடிகை மெளனம்
ஆனால், இது தொடர்பாக இப்போதைக்கு வெளியே எதுவும் சொல்ல வேண்டாம். சொன்னால், வரும் பெரிய வாய்ப்புகள் அப்படியே வேறு நடிகைக்கு சென்று விடும் என சில நண்பர்கள் சொன்ன அறிவுரையை கேட்டு அப்படியே மெளனமாக இருக்கிறாராம். வாய் சும்மா இருந்தாலும் கை சும்மா இருக்குமா? இப்படி போட்டோக்களை ஷேர் செய்து மாட்டிக் கொண்டாரே என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











