Don't Miss!
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீரா, எஸ்ஜே சூர்யா கல்யாணம் ஓவர்?
மீரா ஜாஸ்மினும், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் சத்தம் போடாமல் மோதிரம் மாற்றிக் கல்யாணம் செய்துவிட்டதாக புதிதாக ஒரு தகவல் கோலிவுட்டில் படு வேகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
சண்டக்கோழி மீரா ஜாஸ்மினும், மன்மத ராசா எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து திருமகன் என்ற படத்தில் நடித்துவருகிறார்கள். இந்தப் படத்தில் நடிக்க ஆள் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டார் சூர்யா. எல்லாம் அவர் மீதுஏறிக் கொண்ட பிளேபாய் இமேஜ்தான் காரணம்.பின்னர் ஒரு வழியாக மீரா ஜாஸ்மின் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் ஏகப்பட்ட கண்டிஷன்களைப்போட்டார். சூர்யா என்னைத் தொடக் கூடாது, நெருக்கமான காட்சிகள் இருக்கக் கூடாது, குறிப்பாக உம்மாகாட்சிகள் கூடவே கூடாது என்று பலப்பல கண்டிஷன்களைப் போட்டுத்தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்மீரா.
தேனிப்பக்கம் ஷூட்டிங் ஆரம்பித்த பிறகும் கூட அவர் காதல் காட்சிகளில் நடிப்பதில் ஏகப்பட்டகட்டுப்பாடுகளை காட்டி வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இருவரைப் பற்றியும் ஒரு வதந்திகிளம்பியது.
மீராவும், சூர்யாவும் சீரியஸாக காதலிக்க ஆரம்பித்து விட்டனர். விரைவில் கல்யாணம் என்று கிளம்பிய அந்தசெய்தியால் கோலிவுட்டில் நெர்வஸ்னஸ் ஜாஸ்தியாகிப் போனது. ஆனால் இந்த செய்தியை சூர்யா உடனடியாகமறுத்தார். இதெல்லாம் உண்மையே இல்லை என்று புலம்பலாக பதில் சொன்னார்.
ஆனால் மீரா தரப்பிலிருந்து எந்த மறுப்பும் வரவில்லை. இதனால் காதல் உண்டா, இல்லையா என்பது தெரியாமல்மண்டை காய்ந்து போனார்கள் கோலிவுட் வாலாக்கள். இந்த வதந்தி அப்படியே அமுங்கிப் போய் விட்டது.
ஆனால் இப்போது புதிதாக ஒரு மேட்டர் கிளம்பியுள்ளது. அதாவது சமீபத்தில் சூர்யாவும், மீராவும்பெங்களூருக்குப் போய் அங்குள்ள பிரபலமான ஒரு சர்ச்சில் வைத்து சத்தம் போடாமல் மோதிரம் மாற்றிக்கல்யாணம் செய்து கொண்டார்கள் என்பதுதான் அந்த புதுச் செய்தி.
மீரா கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல சூர்யாவும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்என்றாலும் மதம் கிருஸ்தவம் தான்.
இந்த திருமண செய்தியாவது உண்மையா, அல்லது புரளியா எனத் தெரியவில்லை. சூர்யா, மீரா தரப்போ மூச்சுகூட விடாமல் கமுக்கமாக இருக்கிறது.
ப்ளீஸ், சொல்லிருங்கப்பா.