பொய்க்கணக்கு காட்டி வினியோகஸ்தரை ஏமாற்றிய தியேட்டர் அதிபர்கள்!
இரண்டு மாதங்களுக்கு முன்பு ரிலீஸான பிரம்மாண்ட சரித்திர படம் இன்றுவரை தமிழ்நாட்டில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக வார இறுதியில் குடும்பம் குடும்பமாக வந்து ஹவுஸ்ஃபுல் ஆக்குகிறார்கள்.
தமிழ்நாட்டில் அந்த படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர் நல்ல லாபம் பார்த்துவிட்டார். ஆனாலும் தான் ஏமாற்றப்பட்டதாக புலம்பி வருகிறாராம்.

முதல் வாரம் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததைப் பயன்படுத்தி டிக்கெட் விலையை ஏற்றி தியேட்டர் அதிபர்களும் ஏரியா வினியோகஸ்தர்களும் கல்லா கட்டிவிட்டனராம். அந்தக் கணக்கு முறையாகக் காட்டவில்லை என்பதால் இவருக்கு கோடிக்கணக்கில் வரவேண்டியது போய்விட்டதாம். இதை சொல்லி புலம்பி வருவதோடு சங்கத்திடம் புகார் தெரிவிக்கப்போகிறாராம்.
சீக்கிரமே பஞ்சாயத்து நடக்கலாம்!
Comments


Click it and Unblock the Notifications