என்னை பழி வாங்குகிறார்கள்... புலம்பும் மில்க் நடிகை!
சென்னை: வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள நடிகை தன்னை மீடியாக்காரர்கள் திட்டமிட்டு பழி வாங்குவதாக புலம்பி வருகிறார்.
பக்கத்து மாநிலத்தில் போலி முகவரி கொடுத்து கார் வாங்கியதாக வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கியுள்ளார் மில்க் நடிகை. கைது, சிறை என்று அவரை பயமுறுத்தும் வகையில் செய்தி வந்துகொண்டே இருக்கிறது. இதுபற்றி மனம் திறந்த அவர் 'கேரள மீடியாவில் என்னிடம் பேட்டி கேட்டார்கள். நான் மறுத்ததால் என்னை பழி வாங்க இதனை கிளப்பியிருக்கிறார்கள்' என்று புலம்பியிருக்கிறார்.
இந்த கேஸை நாங்க முடிச்சு தர்றோம் என்று ஏகப்பட்ட டுபாக்கூர்கள் நடிகையை சுற்ற ஆரம்பித்துள்ளனர். யாரை நம்புவது என்று தெரியாமல் முழிக்கிறாராம் நடிகை.
இதற்கிடையில் விவகாரம் சுமூகமாக முடிய நடிகையே சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications