Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
3 நடிகைகளால் தூக்கத்தை தொலைத்த அம்மாக்கள்
சென்னை: 3 நடிகைகளால் அவர்களின் அம்மாக்களுக்கு தூக்கம் போய்விட்டதாம்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் இரண்டு நடிகைகளும், இந்த இரண்டு மொழி தவிர இந்தி படத்திலும் நடித்து வரும் நடிகை ஒருவரும் இன்னும் சிங்கிளாக உள்ளனர்.
மூன்று நடிகைகளுக்கும் வயது ஏறிக் கொண்டே போகிறது. 30 வயதிற்கு மேல் ஆகியும் அவர்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஒரு நடிகை காதலித்து தோல்வி அடைந்தார். இன்னொரு நடிகை பிரபலம் ஒருவரை காதலிக்கிறார் ஆனால் அவரோ அம்மணியை கண்டுகொள்வது இல்லை.
மூன்றாவது நடிகை ஒரு பிரபலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார். அந்த 3 நடிகைகளுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் அம்மாக்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் நடிகைகள் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை.
சூப்பர் டூப்பரில் ஹீரோயின் முத்தமழை... நாள் முழுக்க நனைந்தேன் - நடிகர் துருவ் எக்ஸ்க்ளூசிவ்
திருமணம் செய்து கொண்டால் நடிப்புக்கு முழுக்கு போட வேண்டி வருமோ என்ற பயத்தால் திருமதி ஆக அவர்கள் தயாராக இல்லையாம். இதனால் அவர்களின் அம்மாக்கள் தான் நிம்மதி இல்லாமல் உள்ளனர்.
நடிகைகளுக்கு உயிர் இருக்கும் வரை படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் லட்சியம். இதற்கு யார் இடையூறாக வந்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டார்களாம்.
மூன்றில் இரண்டு பேர் நடிப்பில் ராட்சசிகள், ஒருவர் பாவம் என்ன தான் நடித்தாலும் தொடர்ந்து கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி வருகிறார். அவரை நம்பி வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுக்க இயக்குநர்கள் யாரும் தயாராக இல்லை.
மேலும் அவரின் மார்க்கெட் நிலவரமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இருப்பினும் அம்மணி தனது கெரியர் சூப்பராக சென்று கொண்டிருப்பது போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.