twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமாவில் அரிதாரம் பூச ஆசைப்படும் நடன நடிகை

    By Mayura Akilan
    |

    ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதுபோல சினிமா, சீரியல், டாக் ஷோ என்று பிரபலமாக இருக்கும் அந்த மாஜி நடன நடிகைக்கு சினிமாவின் மீதுதான் ஆசை அதிகமாம். எனவேதான் மீண்டும் சினிமாவில் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.

    சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, குணசித்திர வேடங்களில் நடித்தவர் அந்த நடிகை, வடமாநிலங்களில் செட்டிலானாலும் சென்னைக்கு பறந்து வந்து சீரியலில் நடித்து விட்டு போகிறார். மாமியார் கதாபாத்திரம்தான் என்றாலும் வடநாட்டு ஸ்டைல் உடை, மேக்அப் என அசத்தும் அந்த நடிகைக்கு இல்லத்தரசிகள் ரசிகைகளாக மாறி உள்ளனர்.

    Mother actress wants to act again

    சீரியலில் கிடைத்த புகழினால் பிரபல டிவி சேனலில் பஞ்சாயத்து பண்ணும் நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார் அந்த மயில் நடிகை. ஏற்கனவே பஞ்சாயத்து செய்தவர் சினிமாவில் பிரபலமாகி வருவதால், மாமியாரான மயில் நடிகைக்கும் சினிமா ஆசை மீண்டும் துளிர்த்து வருகிறதாம் எனவே நல்ல கதையாக இருந்தா சொல்லுங்கப்பா என்று பிரபல இயக்குநர்களுக்கு தூது விட்டு வருகிறாராம்.

    அவர் காலகட்டத்து நடிகைகள் இன்னமும் சினிமாவில் பிரபலமாக நடித்து வருவதே மயில் நடிகைக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளதாம்.

    அப்போ தமிழ் சினிமாவிற்கு இன்னொரு அம்மா நடிகை ரெடி

    English summary
    This mother actress is willing to act again. She was famous for her dance once upon a time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X