ஆளுங்கட்சியின் தீவிர கண்காணிப்பில் இசை நடிகர்!
ஜல்லிக்கட்டு முதல் நெடுவாசல் வரை மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு கமல் உள்ளிட்ட சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
ஜிவி.பிரகாஷ் போன்ற சிலர் போராட்ட களத்துக்கே சென்று தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஆளுங்கட்சியினர் இன்னொரு நடிகர் மீது கண் வைத்திருக்கிறார்கள். அவரும் இசையில் இருந்து வந்து ஹீரோவானவர் தான்.

அந்த ஹீரோ நடித்து சமீபத்தில் வெளியான படம் அரசியல் துரோகங்களை பற்றியது. அடுத்து அவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் டைட்டிலே திமுகவைத் தொடங்கியவரின் பெயர்தான். அதுவும் அரசியல் படம் என்று செய்தி வருவதால் லைட்டை எல்லாம் இந்த பக்கம் திருப்புங்க... என்று உத்தரவிட்டிருக்கிறதாம் ஆளுங்கட்சி.
இதையெல்லாம் எதிர்பார்க்காமலா களத்தில் இறங்கியிருப்பார் நடிகர்?


Click it and Unblock the Notifications











