Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"காதல்" இசையமைப்பாளர் காதலியுடன் ஓட்டம்?
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காதல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் தனது காதலியுடன் தலைமறைவாகி விட்டதாகபரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது.
ஜோஸ்வா ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காதல். மிகவும் பரபரப்புடன் ஓடிக்கொண்டுள்ள இந்தப் படத்திற்கு ஜோஸ்வா ஸ்ரீதர் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் ஜோஸ்வாவின் இசை மிகவும் பேசப்பட்டு வருகிறது. ஜோஸ்வாவின் வீடு அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ளது.இவருக்கு உகாலி என்ற மனைவியும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி நாகாலாந்து மாநலத்தைச் சேர்ந்தவர், காதல் திருமணம் செய்தவர்ஜோஸ்வா.ஜோஸ்வாவுக்கும், இவரது இசைக் குழுவில் உள்ள லதா ஷா என்ற கீபோர்டு கலைஞருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாகத்தெரிகிறது. லதா ஷா பெங்களூரைச் சேர்ந்தவர்.
ஜோஸ்வா தனியாக ஒரு இசைக் குழுவையும் வைத்துள்ளார். அதிலும் லதா ஷாதான் கீபோர்டு வாசிப்பார்.
ஜோஸ்வாவுடன் காதல் வயப்பட்ட லதா ஷா அடிக்கடி பெங்களூரிலிருந்து சென்னை வந்து ஜோஸ்வாவுடன் தங்கியிருப்பார் என்றுகூறப்படுகிறது. இவர்களது காதலை லதா ஷாவின் குடும்பத்தினர் விரும்பவில்லை.
இந் நிலையில் ஜோஸ்வாவும், லதா ஷாவும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்துள்ளார்கள். அதற்குப் பிறகு இருவரையும் காணவில்லை.அவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூர் காவல் நிலையத்தில் லதா ஷாவின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக பெங்களூர் போலீஸார்சென்னை போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரின் தலைமையிலான போலீஸார் சாந்தி காலனியில் உள்ளஜோஸ்வாவின் வீட்டுக்குச் சென்று அவரது தாயார் மற்றும் மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜோஸ்வா ஸ்ரீதர் குறித்து வெளியாகியுள்ள செய்தி திரையுலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.