ஜாகை மாறும் நயன்ஸ் நயனதாராவின் பேச்சும், பழக்கமும் கோலிவுட்காரர்களை பெருசாக குழப்பிக்கொண்டுள்ளதாம். தமிழில் படு வேகமாக உச்சத்திற்குப் போனவர் நயனதாரா. பெரிய ரேஞ்சுக்கு வரப்போகிறார் என எல்லோரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வல்லவன் என்ற சடர்ன்பிரேக்கால் நின்று போய் விட்டது நயனதாராவின் தமிழ் மார்க்கெட்.அம்மணி இப்போது தமிழில் புதிதாக எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.சரி தான் சிம்புவோடு சீக்கிரமே செட்டிலாகப் போவதால்தான் இந்த முடிவோ என்றுஎல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது தெலுங்கில் ஏகப்பட்ட படங்களைவாரிப் போட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளார் நயனதாரா.ஆரம்பத்தில் தெலுங்கில் நடிப்பதில் சுணக்கம் காட்டி வந்த நயனதாரா இப்போதுதானே வலியக்கப் போய் வாய்ப்பு கேட்டு வாரிக் கொண்டிருக்கிறாராம். மூத்த ஹீரோ,சின்ன ஹீரோ என வித்தியாசம் பார்க்காமல் பட வாய்ப்புகளை பாய்ந்து பாய்ந்துநயனதாரா பிடித்துக் கொண்டிருப்பதால், த்ரிஷாக்களும், ஆசின்களும்,ஜெனீலியாக்களும், தமன்னாக்களாலும், இலியானாக்களும் கிலியாகிக்கிடக்கின்றனராம்.இந் நிலையில் தங்கும் இடம் விஷயத்தில் கோலிவுட்டார்களை குழப்போகுழப்பென்று குழப்பி வருகிறார் நயனதாரா.ஆரம்பத்தில் அவர் தி பார்க் ஹோட்டலில் தங்கியிருந்தார். அங்கு ஒருமுறை நள்ளிரவுஆட்டத்தின்போது குறுக்கிட்ட போலீஸார் அங்கு ரெய்டு நடத்தி பரபரப்பைஏற்படுத்தினர். இதையடுத்து அந்த ஹோட்டலிலிருந்து தி.நகரில் உள்ள ஹோட்டலுக்குஇடம் மாறினார்.இங்கு நிரந்தரமாக ஒரு அறையை நயனதாராவுக்காக ஒதுக்கியிருந்தார்கள்.இப்போது அங்கிருந்து மீண்டும் பார்க் ஹோட்டலுக்கே ஜாகையை மாற்றி விட்டாராம்.காரணம் தெரியவில்லை, ஆனால் தி. நகர் ஹோட்டலில் ஏதோ பஞ்சாயத்தாகிவிட்டதாம். அதனால்தான் இடத்தை மாற்றி விட்டார் என்கிறார்கள் கோலிவுட்குருவிகள்.பாவம் தான்!

By Staff
நயனதாராவின் பேச்சும், பழக்கமும் கோலிவுட்காரர்களை பெருசாக குழப்பிக்கொண்டுள்ளதாம்.

தமிழில் படு வேகமாக உச்சத்திற்குப் போனவர் நயனதாரா. பெரிய ரேஞ்சுக்கு வரப்போகிறார் என எல்லோரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வல்லவன் என்ற சடர்ன்பிரேக்கால் நின்று போய் விட்டது நயனதாராவின் தமிழ் மார்க்கெட்.

அம்மணி இப்போது தமிழில் புதிதாக எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.சரி தான் சிம்புவோடு சீக்கிரமே செட்டிலாகப் போவதால்தான் இந்த முடிவோ என்றுஎல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது தெலுங்கில் ஏகப்பட்ட படங்களைவாரிப் போட்டுக் கொள்ள ஆரம்பித்துள்ளார் நயனதாரா.

ஆரம்பத்தில் தெலுங்கில் நடிப்பதில் சுணக்கம் காட்டி வந்த நயனதாரா இப்போதுதானே வலியக்கப் போய் வாய்ப்பு கேட்டு வாரிக் கொண்டிருக்கிறாராம். மூத்த ஹீரோ,சின்ன ஹீரோ என வித்தியாசம் பார்க்காமல் பட வாய்ப்புகளை பாய்ந்து பாய்ந்துநயனதாரா பிடித்துக் கொண்டிருப்பதால், த்ரிஷாக்களும், ஆசின்களும்,ஜெனீலியாக்களும், தமன்னாக்களாலும், இலியானாக்களும் கிலியாகிக்கிடக்கின்றனராம்.

இந் நிலையில் தங்கும் இடம் விஷயத்தில் கோலிவுட்டார்களை குழப்போகுழப்பென்று குழப்பி வருகிறார் நயனதாரா.

ஆரம்பத்தில் அவர் தி பார்க் ஹோட்டலில் தங்கியிருந்தார். அங்கு ஒருமுறை நள்ளிரவுஆட்டத்தின்போது குறுக்கிட்ட போலீஸார் அங்கு ரெய்டு நடத்தி பரபரப்பைஏற்படுத்தினர். இதையடுத்து அந்த ஹோட்டலிலிருந்து தி.நகரில் உள்ள ஹோட்டலுக்குஇடம் மாறினார்.

இங்கு நிரந்தரமாக ஒரு அறையை நயனதாராவுக்காக ஒதுக்கியிருந்தார்கள்.

இப்போது அங்கிருந்து மீண்டும் பார்க் ஹோட்டலுக்கே ஜாகையை மாற்றி விட்டாராம்.காரணம் தெரியவில்லை, ஆனால் தி. நகர் ஹோட்டலில் ஏதோ பஞ்சாயத்தாகிவிட்டதாம். அதனால்தான் இடத்தை மாற்றி விட்டார் என்கிறார்கள் கோலிவுட்குருவிகள்.

பாவம் தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X