நயன்தாரா - பிரபு தேவா மும்பையில் ரகசிய திருமணமா?

நயன்தாராவை மணப்பதற்காகவே முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும் இரு வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார்.
இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மும்பையில் அல்லது திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. சிலர் இந்தத் திருமணம் கொச்சியில் நடப்பதாகக் கூறிவந்தனர்.
ஆனால் தற்போது ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்திருமணத்தில் இருவரின் பெற்றோர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்து முறைப்படி புரோகிதர்கள் வைத்து வேள்வி வளர்த்து இந்த திருமணம் நடந்தது என்கின்றனர்.
நயன்தாராவுடனான திருமணத்தை அழைப்பிதழ்கள் அச்சிட்டு ஆடம்பரமாக நடத்தினால், ரம்லத்துக்கும் தனக்கும் பிறந்த மகன்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியதால் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து விட்டதாக பிரபுதேவாவுக்கு நெருங்கியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருமணத்தை மும்பை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பின்னர் நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளிக்க முடிவு செய்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











