நிலாவைப் பிழிந்து... "அ..ஆ.. படத்தின் மூலம் தனது புதிய கண்டுபிடிப்பான நிலாவை அடுத்த சிம்ரனாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்எஸ்.ஜே. சூர்யா.வாலி படம் வருவதற்கு முன்பு வரை சிம்ரன் வெறும் கவர்ச்சி ராணியாகவே வலம் வந்து கொண்டிருந்தார் என்பதுஅனைவருக்கும் தெரியும்.இந்தப் படம் வெளியான பிறகு தான் அடடா.. சிம்ரனுக்கு நடிக்கவும் தெரியுமா? என்று பலர் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள்.அந்த அளவிற்கு கவர்ச்சிக்கு கவர்ச்சி, நடிப்புக்கு நடிப்பு என்று இந்தப் படத்தில் சிம்ரன் பெரும் ரகளையே செய்திருந்தார்.வாலி படத்தின் மூலம் சிம்ரன் எங்கேயோ சென்று விட்டார். இதே போல தனது அடுத்த படமான "அ..ஆ.. மூலம் டெல்லிப்பெண்ணான நிலாவை டாப் லெவலுக்கு கொண்டு போவேன் என்கிறார் சூர்யா.இந்தப் படத்தில் சூர்யா ஒரு துடிப்பு மிக்க இளம் பத்திரிகையாளராக நடிக்கிறார். அவர் எழுதும் சில அதிர்ச்சியான செய்திகளால்ஏற்படும் சிக்கல்கள் தான் இந்தப் படத்தின் கதையாம்."அ..ஆ.. படத்திற்காக டெல்லி வழியாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மீரா சோப்ரா என்ற இந்தநிலாவுக்கு அ.. ஆ.. என்று தமிழை சொல்லிக் கொடுப்பதற்குள் சூர்யா ஒரு வழியானார் என்பது பழைய கதை. தமிழில்வாயசைக்கவே தெரியாமல் இருந்த இவர் இப்போது கொஞ்சிக் கொஞ்சி தமிழ் பேசுகிறாராம்.நிலாவுக்காக ராப்பகலாக மூளையைக் கசக்கி பல சூப்பர் சீன்களை வைத்துள்ளார் சூர்யா. இந்த சீன்களுக்காக நிலாவைசக்கையாகப் பிழிந்தெடுத்து வருகிறார். நிலாவும் முணகாமல் ஒத்துழைக்கிறார். அடிக்கடி தனது வீட்டுப் பக்கமும் கூட்டிப்போய்விடுகிறார். நடிப்பு சொல்லிக் கொடுக்க போலிருக்கிறது...!!

By Staff

"அ..ஆ.. படத்தின் மூலம் தனது புதிய கண்டுபிடிப்பான நிலாவை அடுத்த சிம்ரனாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்எஸ்.ஜே. சூர்யா.

வாலி படம் வருவதற்கு முன்பு வரை சிம்ரன் வெறும் கவர்ச்சி ராணியாகவே வலம் வந்து கொண்டிருந்தார் என்பதுஅனைவருக்கும் தெரியும்.

இந்தப் படம் வெளியான பிறகு தான் அடடா.. சிம்ரனுக்கு நடிக்கவும் தெரியுமா? என்று பலர் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள்.அந்த அளவிற்கு கவர்ச்சிக்கு கவர்ச்சி, நடிப்புக்கு நடிப்பு என்று இந்தப் படத்தில் சிம்ரன் பெரும் ரகளையே செய்திருந்தார்.

வாலி படத்தின் மூலம் சிம்ரன் எங்கேயோ சென்று விட்டார். இதே போல தனது அடுத்த படமான "அ..ஆ.. மூலம் டெல்லிப்பெண்ணான நிலாவை டாப் லெவலுக்கு கொண்டு போவேன் என்கிறார் சூர்யா.

இந்தப் படத்தில் சூர்யா ஒரு துடிப்பு மிக்க இளம் பத்திரிகையாளராக நடிக்கிறார். அவர் எழுதும் சில அதிர்ச்சியான செய்திகளால்ஏற்படும் சிக்கல்கள் தான் இந்தப் படத்தின் கதையாம்.

"அ..ஆ.. படத்திற்காக டெல்லி வழியாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள மீரா சோப்ரா என்ற இந்தநிலாவுக்கு அ.. ஆ.. என்று தமிழை சொல்லிக் கொடுப்பதற்குள் சூர்யா ஒரு வழியானார் என்பது பழைய கதை. தமிழில்வாயசைக்கவே தெரியாமல் இருந்த இவர் இப்போது கொஞ்சிக் கொஞ்சி தமிழ் பேசுகிறாராம்.

நிலாவுக்காக ராப்பகலாக மூளையைக் கசக்கி பல சூப்பர் சீன்களை வைத்துள்ளார் சூர்யா. இந்த சீன்களுக்காக நிலாவைசக்கையாகப் பிழிந்தெடுத்து வருகிறார். நிலாவும் முணகாமல் ஒத்துழைக்கிறார். அடிக்கடி தனது வீட்டுப் பக்கமும் கூட்டிப்போய்விடுகிறார். நடிப்பு சொல்லிக் கொடுக்க போலிருக்கிறது...!!

நிலாவை சிம்ரனாக்குவேன் என்று சூர்யா சொல்லிக் கொண்டிருந்தாலும், நிலா என்ன சொல்கிறார் தெரியுமா?

சிம்ரனின் நடிப்புக்கு முன்னால் நான் ஒன்றுமே கிடையாது. நடிப்பில் அவர் ஒரு கடல். நான் அதில் ஒரு சிறு துளி மட்டும்தான்(ஆகா, என்னே தன்னடக்கம்!). இப்போது தான் நான் சினிமா உலகத்திற்குள் நுழைந்துள்ளேன். இன்னும் எவ்வளவோசாதிக்க வேண்டியுள்ளது. முதலில் இயக்குனர் சூர்யா என்னை நடிக்க அழைத்த போது எனக்கு சரி, ஏதோ வந்தவரை நடிப்போம்என்று தான் நினைத்திருந்தேன்.

ஆனால் அவரது நியூ படத்தைப் பார்த்த பிறகு தான் சூர்யாவின் திறமை எனக்கு தெரிய வந்தது. இதனால் எனக்கும் ஒரு வேகம்வந்துள்ளது. இந்தப் படத்தில் எனது முழுத் திறமையையும் காட்டி நடித்து வருகிறேன் (அது தான் தெரியுமே) என்கிறார்.

சொல்வதைப் போலவே ஒவ்வொரு சீனிலும் காட்சியோடு ஒன்றி விடுகிறாராம் நிலா.. எள் என்றால் எண்ணையாக நிற்கிறாராம்.சும்மாவே தன்னுடைய ஜோடிகளை முடிந்த வரை "வேலை வாங்கும் சூர்யாவுக்கு இவரது அபாரமான ஒத்துழைப்பு ரொம்பவேஒத்தாசையாக இருக்கிறதாம்.

கொடுத்து வெச்ச ராசா..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X