2 நடிகைகள், 2 இயக்குனர்கள்... இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் நடிகைகள் இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய விஷயம் அல்ல. நடிக்க வரும் புதிதில்இயக்குனர்களின் அலுவலகங்களிலேயே அவர்கள் தங்குவதும் கூட வாடிக்கையான ஒரு மேட்டர்தான்.ஆனால் இரண்டு இயக்குனர்களின் அலுவலகங்களில் தங்கியுள்ள இரண்டு நடிகைகள் குறித்துத்தான் இப்போது கோலிவுட்டில்மிக சூடாகப் பேசப்படுகிறது.முதலாமவர் நிலா. மீரா குல்கர்னி என்ற நாமகரணம் கொண்டவரை சென்னைக்குக் கூட்டி வந்து நிலா என்று பெயர் சூட்டி, அன்பேஆருயிரே என்று உலவ விட்டுள்ளார் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. நிலாவுக்கு இப்போது எல்லாமே சூர்யாதான்.கதை கேட்பது முதல் கால்ஷீட் தேதி கொடுப்பது வரை, அட்வான்ஸை வாங்கி நிலாவின் கையில் திணிப்பது வரைஎல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்கிறாராம் சூர்யா.சூர்யாவைக் கேட்காமல் எதையும் செய்யாத நிலா இப்போது தங்கியிருப்பது சூர்யாவின் அலுவலகத்தில்தான். அங்கு நிலாவுக்குராஜ மரியாதை, அண்ணி மீது சூர்யாவின் உதவியாளர்கள் அளவற்ற அன்பு காட்டி உபசரிக்கிறார்கள்.சூர்யாவுக்கும், நிலாவுக்கும் சீக்கிரத்திலேயே கல்யாணம் என்ற பேச்சும் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் உள்ளது. ஆனாலும்சில புதிய படங்களில் நிலாவை புக் செய்ய சூர்யா ஒ.கே. கூறியுள்ளதால், கல்யாணம் தள்ளிப் போகும் போலத் தெரிகிறதாம்.சினிமா வாய்ப்புகளை விட விளம்பரப் படங்களில் நடிக்க நிலாவுக்கு ரொம்ப ஆசையாம். காரணம் காசு சட்டுப்புட்டென்றுஉடனே வருவதாலும், அதிக அலைச்சல், வேலைப்பளு அதிகம் இல்லாததாலும், சீக்கிரமே வேலை முடிந்து விடுவதாலும்,விளம்பரங்களில் நடிக்க ரொம்பப் பிரியப்படுகிறார் நிலா. சூர்யாவுக்கும் அதில்தான் உடன்பாடாம்.சரி ரெண்டாவது நாயகிக்கு வருவோம். இவர் பத்..ரியா. தவமாய் தவமிருந்த இயக்குனரின் புதிய கண்டுபிடிப்பு. கோபிநடிகைக்கு மாற்றாக மன்னர் பெயர் கொண்ட இயக்குனர் கொய்து வந்த கேரளத்து மாங்கனி.படு தில் பார்ட்டியான பத்..ரியா, இப்போது இயக்குனரின் அலுவலகத்தில்தான் தங்கி படப்பிடிப்புகளுக்குப் போய் வருகிறார்.தவமிருந்த படத்திற்காக சென்னைக்கு வந்த அவர் தங்க சரியான இடம் தோதுப்படாததால், இயக்குனரின் அலுவலகத்திலேயேதங்கிக் கொண்டார்.இப்போது படப்பிடிப்பு முடிந்தும் கூட தங்கல் தொடருகிறதாம். கேட்டால், இயக்குனரின் உதவியாளராகப் போகிறேன், விரைவில்ஒரு படத்தை இயக்கப் போகிறேன். அதற்கு அவருக்குப் பக்கத்திலேயே இருந்தால்தான் சரி வரும் என்று கூறுகிறார் பத்.. ரியாமேலும், இப்போது இயக்குனரும் படு பிசியாக இருப்பதால், அவரது அலுவலகத்தில் எப்போதும் டிஸ்கஷன் நடந்து கொண்டேஇருக்கிறதாம். இதனால் இயக்கம் குறித்த பல டிப்ஸ்களை எளிதில் சேகரிக்க முடிகிறதாம் பத்..ரியாவுக்கு.இந்த அலுவலகத்திலிருந்துதான் இப்போது தான் நடிக்கும் லிஸ்ட் படப்பிடிப்புக்கும் போய் வருகிறாராம் நடிகை. நடிகை இங்கு தங்கியிருப்பதில் இயக்குனருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். ஆனால் அவரது வீட்டில்தான் புகைச்சல்ஆரம்பித்துள்ளதாம்!

By Staff

இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் நடிகைகள் இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய விஷயம் அல்ல. நடிக்க வரும் புதிதில்இயக்குனர்களின் அலுவலகங்களிலேயே அவர்கள் தங்குவதும் கூட வாடிக்கையான ஒரு மேட்டர்தான்.

ஆனால் இரண்டு இயக்குனர்களின் அலுவலகங்களில் தங்கியுள்ள இரண்டு நடிகைகள் குறித்துத்தான் இப்போது கோலிவுட்டில்மிக சூடாகப் பேசப்படுகிறது.

முதலாமவர் நிலா. மீரா குல்கர்னி என்ற நாமகரணம் கொண்டவரை சென்னைக்குக் கூட்டி வந்து நிலா என்று பெயர் சூட்டி, அன்பேஆருயிரே என்று உலவ விட்டுள்ளார் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. நிலாவுக்கு இப்போது எல்லாமே சூர்யாதான்.

கதை கேட்பது முதல் கால்ஷீட் தேதி கொடுப்பது வரை, அட்வான்ஸை வாங்கி நிலாவின் கையில் திணிப்பது வரைஎல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்கிறாராம் சூர்யா.


சூர்யாவைக் கேட்காமல் எதையும் செய்யாத நிலா இப்போது தங்கியிருப்பது சூர்யாவின் அலுவலகத்தில்தான். அங்கு நிலாவுக்குராஜ மரியாதை, அண்ணி மீது சூர்யாவின் உதவியாளர்கள் அளவற்ற அன்பு காட்டி உபசரிக்கிறார்கள்.

சூர்யாவுக்கும், நிலாவுக்கும் சீக்கிரத்திலேயே கல்யாணம் என்ற பேச்சும் அவ்வப்போது எழுந்து கொண்டுதான் உள்ளது. ஆனாலும்சில புதிய படங்களில் நிலாவை புக் செய்ய சூர்யா ஒ.கே. கூறியுள்ளதால், கல்யாணம் தள்ளிப் போகும் போலத் தெரிகிறதாம்.

சினிமா வாய்ப்புகளை விட விளம்பரப் படங்களில் நடிக்க நிலாவுக்கு ரொம்ப ஆசையாம். காரணம் காசு சட்டுப்புட்டென்றுஉடனே வருவதாலும், அதிக அலைச்சல், வேலைப்பளு அதிகம் இல்லாததாலும், சீக்கிரமே வேலை முடிந்து விடுவதாலும்,விளம்பரங்களில் நடிக்க ரொம்பப் பிரியப்படுகிறார் நிலா. சூர்யாவுக்கும் அதில்தான் உடன்பாடாம்.

சரி ரெண்டாவது நாயகிக்கு வருவோம். இவர் பத்..ரியா. தவமாய் தவமிருந்த இயக்குனரின் புதிய கண்டுபிடிப்பு. கோபிநடிகைக்கு மாற்றாக மன்னர் பெயர் கொண்ட இயக்குனர் கொய்து வந்த கேரளத்து மாங்கனி.


படு தில் பார்ட்டியான பத்..ரியா, இப்போது இயக்குனரின் அலுவலகத்தில்தான் தங்கி படப்பிடிப்புகளுக்குப் போய் வருகிறார்.தவமிருந்த படத்திற்காக சென்னைக்கு வந்த அவர் தங்க சரியான இடம் தோதுப்படாததால், இயக்குனரின் அலுவலகத்திலேயேதங்கிக் கொண்டார்.

இப்போது படப்பிடிப்பு முடிந்தும் கூட தங்கல் தொடருகிறதாம். கேட்டால், இயக்குனரின் உதவியாளராகப் போகிறேன், விரைவில்ஒரு படத்தை இயக்கப் போகிறேன். அதற்கு அவருக்குப் பக்கத்திலேயே இருந்தால்தான் சரி வரும் என்று கூறுகிறார் பத்.. ரியா

மேலும், இப்போது இயக்குனரும் படு பிசியாக இருப்பதால், அவரது அலுவலகத்தில் எப்போதும் டிஸ்கஷன் நடந்து கொண்டேஇருக்கிறதாம். இதனால் இயக்கம் குறித்த பல டிப்ஸ்களை எளிதில் சேகரிக்க முடிகிறதாம் பத்..ரியாவுக்கு.

இந்த அலுவலகத்திலிருந்துதான் இப்போது தான் நடிக்கும் லிஸ்ட் படப்பிடிப்புக்கும் போய் வருகிறாராம் நடிகை.


நடிகை இங்கு தங்கியிருப்பதில் இயக்குனருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையாம். ஆனால் அவரது வீட்டில்தான் புகைச்சல்ஆரம்பித்துள்ளதாம்!

ஏற்கனவே மீனாவுடன் பலமாக கிசுகிசுக்கப்பட்ட இந்த இயக்குனரின் பெயர் இப்போது இன்னொரு நடிகையுடன் இணைத்துப்பேசப்படுகிறது.

அந்த இயக்குனர் தவறு செய்கிற ரகம் அல்ல என்பதால், எதையும் சமாளிப்பார் என்றும் கூறுகிறது கோலிவுட்.

Read more about: kollywoods hottest gossips
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X