இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் இடையே பிரச்சனை: படத்தை வாங்க ஆள் இல்லை
சென்னை: முன்னணி நடிகருக்கும், இயக்குநருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அவர்களின் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம்.
வாரிசு இயக்குநர், பிரபல முன்னணி நடிகர் ஒருவரை வைத்து படம் எடுத்துள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போனதால் ரசிகர்கள் கடுப்பாகினர்.

இயக்குநருக்கும், நடிகருக்கும் இடையே பிரச்சனையாம். என்னிடம் சொன்ன கதை ஒன்று, படமாக எடுத்த கதை வேறு என்று நடிகர் கோபத்தில் இருக்கிறாராம். படத்தை முழுதாக பார்த்த பிறகு உங்களுக்கே தெரியும் என்கிறாராம் இயக்குநர்.
ஹீரோவுக்கும், இயக்குநருக்கும் இடையே பிரச்சனை என்ற செய்தி காட்டுத்தீயாக பரவிவிட்டது. இதனால் அந்த படத்தை வாங்க தமிழகத்தில் யாரும் முன் வரவில்லையாம்.
யார் வாங்கினால் என்ன, வாங்காமல் போனால் என்ன நானே ரிலீஸ் பண்ணிக்கிறேன் என்கிறாராம் நடிகர். யார் ரிலீஸ் செய்தால் என்ன படத்தை வெளியிடுங்க அண்ணா என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











