ஆட்டம் போட்டதால் அடங்கிக் கிடக்கும் அட்டகத்தி!
புரமோஷனுக்கு வரமாட்டேன் என்று ஆடிய நடிகர் இப்போது படமே இல்லாமல் நடித்த படங்களும் முடங்கியதால் வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்.
அட்டகத்தி மூலம் அறிமுகமாகி தேசிய விருது படம் மூலம் நல்ல நடிகர் என்றும் பெயர் எடுத்தார் நடிகர். தமிழ் சினிமாவே தூக்கி வைத்துக் கொண்டாடியதில் தலைக்கனம் ஏறியது. புரமோஷனுக்கு வர மாட்டேன் என்று சொன்னவர் சம்பளத்தையும் அதிரடியாக ஏற்றி கோடிகளில் கேட்க ஆரம்பித்தார்.

இதனால் புது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சும்மா உட்கார்ந்துள்ளார். நடித்து முடித்த மூன்று படங்கள் ரிலீஸுக்கு தயாராகி பெட்டிக்குள் தூங்குகின்றன.
அவை ரிலீஸ் ஆனாலும் நடிகர் அட்ராசிட்டியை குறைத்துக்கொண்டால்தான் அடுத்த படம் கிடைக்கும். இறங்கி வருவாரா?


Click it and Unblock the Notifications










