பெரியப்பா விட்ட சாபம்.. குல தெய்வ கோயிலில் முறையிட்ட நம்பர் நடிகை.. இதுதான் காரணமா?
சென்னை: சமீபத்தில் கணவர் உடன் நம்பர் நடிகை குல தெய்வ கோயிலுக்கு சென்றதற்கு பின்னணியில் பெரிய காரணமே இருப்பதாக கூறுகின்றனர்.

கணவரின் உறவினர்களை எல்லாம் பெரிதாக கண்டுக் கொள்ளாமல் கணவரின் குல சாமியையும் மதிக்காமல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தான் தொடர்ந்து தோல்வி முகமாக அந்த நடிகைக்கும் அவரது கணவருக்கும் பல பிரச்சனைகள் வருவதாக பேச்சுக்கள் அடிபட்ட வந்த நிலையில், தான் எப்போதுமே பார்க்கும் ஜோசியரிடம் இதற்கான பரிகாரத்தை நாடி இருக்கிறார் நம்பர் நடிகை.
உடனே குல தெய்வம் கோபத்தில் இருக்கு, அங்கே சென்று சாந்தி பூஜை செய்து வழிபட்டு வந்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக மாறிவிடும் பழையபடி வெற்றி படிக்கட்டில் நீயும் உன் கணவரும் பயணம் செய்வாய் என சொல்ல, உடனடியாக கணவருடன் அவரது சொந்த ஊருக்கு விசிட் அடித்து குல தெய்வ கோயிலில் கண்களில் நீர்வடிய உருகி வேண்டியிருக்கிறாராம் நம்பர் நடிகை.

பரிகாரம்:
பெரியப்பா உள்ளிட்ட சொந்தக்காரர்கள் திருமணத்தின் போது தங்களை அழைக்கவே இல்லை என சபித்த நிலையில், அதெல்லாம் வெற்றிக்கு தடையாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கான பரிகாரமாகவே திடீரென குல தெய்வ கோயிலுக்கு நம்பர் நடிகை விசிட் அடித்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
திருமண இடம் மாறியதில் இருந்து திருமணம் நடைபெற்ற பிறகு நம்பர் நடிகைக்கும் அவரது கணவருக்கும் தொழில் ரீதியாக ஏகப்பட்ட தடைகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்த நிலையில், அதனை எப்படி சரி செய்வது என்கிற நோக்கத்துடன் தான் நடிகை இப்படியொரு விசிட் அடித்துள்ளதாக கூறுகின்றனர். மேலும், கணவரின் உறவினர்களையும் கூல் பண்ணும் விதமாக சில வேலைகளையும் இருவரும் செய்து விட்டுத் தான் ஊர் திரும்பினர் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இனிமேல், பழையபடி தனது சினிமார் கரியரும் தனது கணவரின் சினிமா பாதையும் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் சிக்ஸர் அடிக்கும் என்கிற மன நிறைவுடன் சந்தோஷமாக உள்ளனர் என இண்டஸ்ட்ரியில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











