ஏன், எனக்கு ரூ.15 கோடி கொடுத்தால் தான் என்ன?: ஒல்லி இயக்குனர் குசும்பு
சென்னை: தனக்கு தாராளமாக ரூ.15 கோடி கொடுக்கலாம், அதில் தவறு ஒன்றும் இல்லை என்று ஒல்லி இயக்குனர் கூறி வருகிறாராம்.
இதுவரை இரண்டு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் அந்த ஒல்லிப்பிச்சான். இரண்டு படங்களும் ஹிட்டானது. இரண்டாவது படத்திலேயே லீடரை இயக்கினார். இதையடுத்து மீண்டும் லீடருடன் கை கோர்த்துள்ளார்.

லீடரோ ஒல்லிக்கு ரூ. 15 கோடி சம்பளம் கொடுக்குமாறு தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளாராம். இரண்டே இரண்டு படத்தை இயக்கிவிட்டு ரூ. 15 கோடி சம்பளமா என தயாரிப்பாளர்கள் வியக்கிறார்கள்.
இது குறித்து அறிந்த ஒல்லியோ, ஏன் எனக்கு ரூ.5 அல்ல ரூ.15 கோடி கொடுத்தாலும் தகும், அதில் தப்பு எதுவும் இல்லை என்று கூலாக கூறுகிறாராம். ரூ.15 கோடி டூ மச் தம்பி கொஞ்சம் இறங்கி வாங்க என தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம்.
பல ஹிட் கொடுத்த இயக்குனர்கள் வாங்கும் சம்பளத்தை ஒல்லி தற்போதே கேட்கிறார்.


Click it and Unblock the Notifications











