இப்டி சொல்லீட்டீங்களே மாமா... கவலையில் நொந்து நூடுல்ஸ் ஆன நடிகர்!
சென்னை: இசையைத் தொடர்ந்து நடிப்பை கையில் எடுத்த இளம் நடிகர் அவர். முதல் படம் தந்த நல்ல நடிகர் என்ற பெயரை, இரண்டாவது நடித்த படம் நாசமாக்கியிருக்கிறது என்றே கூறலாம்.
அந்தளவிற்கு நடிகைகள் பெயரைக் கொண்டு வெளியான அந்தப் படத்தால் நடிகரின் இமேஜே கெட்டுள்ளது. படம் ‘ஏஏஏ...' என எல்லாரும் விமர்சித்ததால் நடிகர் ஏகத்துக்கும் அப்செட்.

இந்நிலையில் தனது மாமாவான இசைப்புயலைத் தனது படத்தைப் பார்க்கும்படி அழைத்தாராம் நடிகர். ஆனால், ஏற்கனவே விமர்சனங்களை அறிந்த புயல், படத்தை பார்க்க மாட்டேன் என்று கரையைக் கடந்து விட்டதாம்.
அதோடு, நல்ல படத்தில் நடித்து விட்டு என்னைக் கூப்பிடு என அறிவுரை வேறு செய்தாராம். இதனால், தனது அடுத்தடுத்த படங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தீவிரமாகச் செயல்பட்டு வருகிறாராம் அந்த பிரகாஷமான நடிகர்.


Click it and Unblock the Notifications











